• Login
Thursday, July 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வெடித்த புதிய மோதல்…! அமெரிக்கா மீது ஈரான் போர்க்குற்றச்சாட்டு

GenevaTimes by GenevaTimes
July 16, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வெடித்த புதிய மோதல்…! அமெரிக்கா மீது ஈரான் போர்க்குற்றச்சாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரான் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.



ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பொதுமக்களின் உள்கட்டமைப்புகளை இலக்குவைத்ததாகச் சுட்டிக்காட்டி இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அதே நேரத்தில் பாரசீக வளைகுடாவில் உள்ள அண்டை அரபு நாடுகள் மீது தான் நடத்திய தாக்குதல்கள் தற்காப்பு நடவடிக்கைகள் என்றும் அது நியாயப்படுத்தியுள்ளது.

பொதுமக்களின் வசதிகள்



இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஈரானிய அமைச்சகம் அமெரிக்கா மீது, குறிப்பாகப் பொதுமக்களின் வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை இலக்குவைத்ததன் மூலம் பல போர்க்குற்றங்களை புரிந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

வெடித்த புதிய மோதல்...! அமெரிக்கா மீது ஈரான் போர்க்குற்றச்சாட்டு | Iran Accuses Us Of Committing War Crimes

இத்தகைய தாக்குதல்கள் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படை விதிகளை அப்பட்டமாக மீறுவதாகும் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.



அண்டை நாடுகள் மீதான ஈரானின் தாக்குதல்களை நியாயப்படுத்திய அந்த அறிக்கை, அவை தற்காப்புக்கானவை என்றும் சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் 51ஆவது பிரிவின் கீழ் ஈரானின் இயல்பான மற்றும் சட்டபூர்வமான தற்காப்பு உரிமைக்கு இணங்க அமைந்தவை என்றும் விவரித்துள்ளது.

குடியிருப்பு கட்டிடம் 

இருப்பினும், பல்வேறு வளைகுடா நாடுகளில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள், விடுதிகள், சிவில் விமான நிலையங்கள் மற்றும் முக்கிய எரிசக்தி மற்றும் நீர் வசதிகள் மீது ஈரான் இதற்கு முன்னர் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் குறித்தோ அல்லது சமீபத்தில் வணிகக் கப்பல்கள் மீது நடத்திய தாக்குதல்கள் குறித்தோ அந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.


குறிப்பாக, ஜூன் 3 அன்று குவைத் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தைக் கடுமையாகச் சேதப்படுத்தி ஒருவரைக் கொன்று, 60 இற்கும் மேற்பட்டோரைக் காயப்படுத்திய தாக்குதல் மற்றும் கடந்த மாத இறுதியில் பஹ்ரைனின் குடியிருப்பு கட்டிடம் ஒன்றுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாக அந்நாட்டு உள்நாட்டு அமைச்சகம் தெரிவித்த தாக்குதல் ஆகியவை குறித்தும் அதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

வெடித்த புதிய மோதல்...! அமெரிக்கா மீது ஈரான் போர்க்குற்றச்சாட்டு | Iran Accuses Us Of Committing War Crimes

அமெரிக்கா செய்ததாகத் தெரிவிக்கப்படும் போர்க்குற்றங்களுக்கு உதாரணமாக ஈராக் எல்லையோர டெஹ்லோரான் பகுதியில் உள்ள கனிம நீர் உற்பத்தி நிலையம் மீது புதன்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களையும், செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை தென்கிழக்கு ஈரானின் சபஹார் (Chabahar) பகுதியில் உள்ள கடல்சார் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலையும் ஈரானிய வெளியுறவு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.



கடந்த வாரத்தில் மட்டும் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களில் இத்தகைய பல ஒத்த தாக்குதல்களும் அடங்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

சரவாக் போதைப்பொருள் கும்பலை முடக்கிய காவல்துறையினர், ‘விநியோகஸ்தர்’ எனக் கூறப்படும் நபரை கைது செய்தனர் – Malaysiakini

Next Post

5வது நாளாக தாக்குதலை தீவிரப்படுத்திய அமெரிக்கா! ஈரான் மீது சரமாரி குண்டு மழை! | US and Iran Trade Fire for Fifth Day as Control of Strait of Hormuz Intensifies

Next Post
5வது நாளாக தாக்குதலை தீவிரப்படுத்திய அமெரிக்கா! ஈரான் மீது சரமாரி குண்டு மழை! | US and Iran Trade Fire for Fifth Day as Control of Strait of Hormuz Intensifies

5வது நாளாக தாக்குதலை தீவிரப்படுத்திய அமெரிக்கா! ஈரான் மீது சரமாரி குண்டு மழை! | US and Iran Trade Fire for Fifth Day as Control of Strait of Hormuz Intensifies

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin