Last Updated:
இதன் காரணமாக ஏலம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்க சார் பதிவாளர் மற்றும் மேலாளர் நிசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
உருளைக்கிழங்கு குறைந்த விலைக்கு ஏலம் போனதால் மேட்டுப்பாளையம் நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் விவசாயிகள் எதிர்ப்பு. பாதியில் ஏலம் நிறுத்தம்.
மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில் நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம் செயல்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக கடந்த 1935 ஆம் ஆண்டு நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம் உருவாக்கப்பட்டது. சங்கத்தில் 618 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
ஊட்டியில் செயல்படும் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தை தலைமை இடமாகக் கொண்டு மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில் கிளை நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம் செயல்பட்டு வருகிறது. நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் இருந்து தமிழகம், கேரளா மற்றும் ஸ்ரீலங்கா, மாலத்தீவு, துபாய், பாகிஸ்தான் ஆகிய வெளிநாடுகளுக்கு நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்திலிருந்து உருளைக்கிழங்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
நேற்று நீலகிரி மாவட்டத்தில் இருந்து நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்திற்கு 22 லோடு உருளைக்கிழங்கு விற்பனைக்கு வந்திருந்தது. ஏலத்தில் 45 கிலோ உருளைக்கிழங்கு ரூபாய் 1300.00 லிருந்து ரூபாய் 1800.00 வரை விற்பனையானது. இந்த நிலையில் இன்று நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து 34 லோடு உருளைக்கிழங்கு விற்பனைக்கு வந்திருந்தது. ஏலத்தில் வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் கூறினார்கள். அப்போது 45 கிலோ உருளைக்கிழங்கு ரூபாய் 1000.00ல் இருந்து ரூபாய் 1300.00 வரை விற்பனையானது. நேற்றைய விலையை விட இன்று குறைந்த விலைக்கு ஏலம் போனதால் விவசாயிகள் ஏலம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உருளைக்கிழங்கு வரத்து அதிகம் மற்றும் கிராக்கி இல்லாததால் ஏலத்தில் வியாபாரிகள் ஆர்வத்துடன் கலந்து கொள்ளாததால் உருளைக்கிழங்கு குறைந்த விலைக்கே ஏலம் போனது. விவசாயிகள் எதிர்ப்பு காரணமாக பாதியில் நிறுத்திய ஏலத்தை நாளை மீண்டும் நடத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது. விவசாயிகள் தரப்பில் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்து ஏலத்தை நடத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன் பின்னர் விவசாயிகள் அமைதியாக கலைந்து சென்றனர். ஏலம் பாதியில் நிறுத்தப்பட்டதால் சுமார் 170 டன் கொண்ட 34 லோடு உருளைக்கிழங்கு தேக்கமடைந்தது. இதனால் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஒருவித பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
December 11, 2025 4:22 PM IST

