அவரது அரண்மனைக்குள்ளேயே ரயில் வந்து செல்லும் என்பதும், அவருக்கு எனத் தனி ரயில் நிலையம் இருந்தது என்பதும் அவரின் ஆடம்பரத்திற்கு சான்று. உண்மையில், நவாப் ஹாமித் அலி கானின் பயணம் சாதாரணமானது அல்ல, அது முழுக்க முழுக்க மிக ஆடம்பரமானது. நவாப் ஹாமித் அலி எப்போதும் தனது தனிப்பட்ட ரயிலிலேயே பயணம் செய்தார். அந்த ரயிலை அவர் ஒரு போக்குவரத்து சாதனமாக மட்டும் பார்க்காமல், தனது கௌரவத்தின் அடையாளமாகவே கருதியதாக கூறப்பட்டுவந்ததுண்டு.


