• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 3, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வெள்ளிக்கிழமை என்பது சுக்கிர பகவானுக்கு உரிய நாளாகும். சுக்கிரனுக்குரிய தெய்வமாக மகாலட்சுமி கருதப்படுவதால் வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமிக்கு உரிய கிழமையாக கருதப்படுகிறது. இந்த மங்கலகரமான நாளில் தொடர்ந்து விரதம் இருந்து வழிபட்டு வந்தால் மகாலட்சுமியின் பரிபூரண அருளை பெற முடியும்.

செல்வத்திற்கு தெய்வமாக மகாலட்சுமியை வழிபடுகிறோம். மகாலட்சுமி எங்கெல்லாம் வாசம் செய்கிறாரோ அங்கு செல்வம் குறையாமல் இருந்து கொண்டே இருக்கும். செல்வம் என்றால் பணம் மட்டும் செல்வம் கிடையாது. தானியம், தைரியம், குழந்தை பாக்கியம், வெற்றி உள்ளிட்டவைகளும் செல்வங்களாகவே கருதப்படுகிறது. மொத்தம் 16 வகையான செல்வங்கள் இருப்பதாக இந்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகிறது. இந்த 16 வகையான செல்வங்களை வழங்கும் அதிபதிகளாக அஷ்டலட்சுமிகள் கருதப்படுகிறார்கள்.

உடல் ஆரோக்கியத்தை தருபவளை ஆதிலட்சுமி என்றும், அனைத்து நலன்களையும் தருபவளை கஜலட்சுமி என்றும், செல்வத்தை தருபவளை தனலட்சுமி என்றும், உணவு தானியங்களை தருபவளை தானியலட்சுமி என்றும், தைரியம் அளிப்பவளை தைரிய லட்சுமி என்றும், வெற்றியை தருபவளை விஜயலட்சுமி என்றும், கல்வி- ஞானத்தை வழங்குபவளை வித்யாலட்சுமி என்றும், குழந்தை பாக்கியம் தருபவளை சந்தானலட்சுமி என்றும் அழைக்கிறோம். இந்த எட்டு தேவிகளும் மகாலட்சுமியின் பல விதமான வடிவங்களாகும். இந்த எட்டு கோலங்கள் தவிர இன்னும் சில வடிவங்களிலும் லட்சுமி தேவி காட்சி தருகிறார்.

மகாலட்சுமியின் பல விதமான வடிவங்களில் ஒன்று தான் வைபவ லட்சுமி. இவரை வழிபடுவதற்கு மிகவும் ஏற்ற நாள் வெள்ளிக்கிழமையாகும். வைபவ லட்சுமிக்குரிய வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து, அவரின் அருளை பெற வேண்டும் என மனதார வேண்டிக் கொண்டால் செல்வ வளம் குறையாமல் வீட்டில் பெருகிக் கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை. வைபவ லட்சுமி விரதத்தை பொதுவாக 11 அல்லது 21 வெள்ளிக்கிழமைகள் என்ற அடிப்படையில் இருக்க வேண்டும். இந்த விரதத்தை பால், பழங்கள் மட்டும் சாப்பிட்டு, காலை துவங்கி, மாலை வரை இருக்க வேண்டும்.

வெள்ளிக்கிழமை விரத முறை

அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, வீட்டில் உள்ள மகாலட்சுமியின் படம் அல்லது சிலை அல்லது ஸ்ரீ யந்திரத்தை ஒரு மனைபலகையில் தூய்மையான துணி விரித்து, அதன் மீது வைக்க வேண்டும். அதை பூக்களால் அலங்கரித்து, பொட்டு வைத்து, நெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். நைவேத்தியமாக பால் பாயசம் படைக்க வேண்டும். இது மகாலட்சுமிக்கு மிகவும் பிரியமான நைவேத்தியமாகும். பிறகு அஷ்டலட்சுமிகளையும் நினைத்து வழிபட வேண்டும். அஷ்டலட்சுமிகளுக்கும் உரிய கதை, மந்திரம் ஆகியவற்றை சொல்லி, வழிபட வேண்டும். கனகதாரா ஸ்தோத்திரம், அஷ்டலட்சுமி போற்றி துதி, ஆகியவற்றை சொல்லி வழிபடுவது மிகச் சிறந்த பலனை தரும்.

மாலையில் வெற்றிலை, பாக்கு, இரண்டு வாழைப்பழம், பால் பாயசம் அல்லது சர்க்கரை பொங்கல் நைவேத்தியமாக படைத்து, வழிபட்ட பிறகு அந்த பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். பூஜை முடிந்து, தீபாராதனை காட்டிய பிறகு நம்முடைய வேண்டுதல் அல்லது கஷ்டங்கள் எதுவாக இருந்தாலும் அதை அஷ்டலட்சுமிகளிடம் முன் வைத்து மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். அதற்கு பிறகே விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இது போல் 11 அல்லது 21 வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து, வழிபட்டால் வீட்டில் பணக்கஷ்டம் உள்ளிட்ட எந்த கஷ்டமும் இருக்காது. செல்வ வளம் சேர்ந்து கொண்டே இருக்கும்.



Read More

Previous Post

அமெரிக்காவிற்கு ட்ரம்ப் உலக வரிகள் மூலம் 300 பில்லியன் டாலர் வருமானம்

Next Post

செம்மணி வழக்கில் திருப்பம்: திடீரென இடமாற்றப்பட்ட யாழ் மாவட்ட நீதிவான்

Next Post
செம்மணி வழக்கில் திருப்பம்: திடீரென இடமாற்றப்பட்ட யாழ் மாவட்ட நீதிவான்

செம்மணி வழக்கில் திருப்பம்: திடீரென இடமாற்றப்பட்ட யாழ் மாவட்ட நீதிவான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin