இதையடுத்து, இருவரும் திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ள பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதை அடுத்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படம் இயக்குவதில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். குழந்தைகள் அவ்வபோது தந்தை தனுஷ் உடன் நேரம் செலவிடுவதை விரும்புகின்றனர். தந்தை ரஜினிகாந்த் இருவரும் இணைந்து வாழவே ஆசைப்படுவதாக சிலர் கூறுகின்றனர்.
இந்நிலையில், விவாகரத்து தொடர்புடைய மனு மீதான விசாரணை அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு, இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி உத்தரவிட்டுள்ளார்.இதைத்தொடர்ந்து இருவரும் நீதிமன்றத்தில் அக்டோபர் மாதம் ஆஜராக உள்ளனர்.

