• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

விவசாய நிதி 20வது தவணை விடுவிப்பு: கேஒய்சி பூர்த்தி செய்ய மோடி வலியுறுத்தல்!

GenevaTimes by GenevaTimes
August 4, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
விவசாய நிதி 20வது தவணை விடுவிப்பு: கேஒய்சி பூர்த்தி செய்ய மோடி வலியுறுத்தல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சுமார் 9.7 கோடி தகுதியுள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில், விவசாயிகளுக்கான கெளரவ நிதியின் 20 ஆவது தவணை விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நிதி தவணையை தவறவிடாமல் இருக்க கேஒய்சி விண்ணப்பத்தை பூர்த்திசெய்யுமாறு பிரதமர் மோடி வலியுறுத்தியிருக்கிறார்.

இது குறித்து பிரதமர் கூறுகையில், வங்கிகளில், கேஒய்சி பூர்த்தி செய்யும் நடவடிக்கையானது நாடு முழுவதும் தொடங்கியிருக்கிறது. ஜன் தன் வங்கிக் கணக்குகளுக்கு, கிராம பஞ்சாயத்துகளில் நடைபெறும் சிறப்பு முகாம் மூலம் இதனை செயல்படுத்தி விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேஒய்சி பூர்த்தி செய்யும் நடைமுறையை மிக விரைவாக எளிதாக நடத்தி முடிக்கும் ஆர்பிஐ மற்றும் அனைத்து வங்கி அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள். இது அடிப்படையில் ஒரு உண்மையான சேவையாகும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

A nationwide KYC drive is underway, with camps being held in Gram Panchayats to ensure Jan Dhan account holders can easily complete the process.

I commend the RBI and all our banking officials for their sincere efforts. This is true service at the grassroots! pic.twitter.com/VWt70A2uTj

— Narendra Modi (@narendramodi) August 3, 2025

பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசி சென்றிருந்தபோது, விவசாயிகளுக்கான கௌரவ நிதியின் 20வது தவணையை, ஆக.2ஆம் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலம், 20வது தவணையாக ரூ.20,500 கோடி ஒதுக்கப்பட்டு, அது 9.7 கோடி தகுதியுடைய விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

மத்திய அரசால் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.6,000 வரவு வைக்கப்படும். இது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என்ற வீதத்தில் தலா ரூ.2000 வரவு வைக்கப்படுகிறது. தற்போது இதற்கான 20வது தவணை விடுவிக்கப்பட்டுள்ளது.

இ-கேஒய்சி கட்டாயம்!

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள், தங்களது ஜன் தன் வங்கிக் கணக்குகளுக்கு இ-கேஒய்சி செய்வது கட்டாயம். பிஎம்-கிசான் இணையதளம் வாயிலாக, விவசாயிகளிடமிருந்து ஓடிபி பெறப்பட்டு கேஒய்சி பூர்த்தி செய்யப்படுகிறது. பொது சேவை மையத்துக்கு விவசாயிகள் நேரடியாக சென்று, பையோ மெட்ரிக் அடிப்படையிலான இ-கேஒய்சியையும் மேற்கொள்ளலாம்.

விவசாயிகள், ஓடிபி அல்லது பையோ மெட்ரிக் அல்லது முக அங்கீகார முறைகளில் ஒன்றைத் தேர்வு செய்து இ-கேஒய்சி விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.



Read More

Previous Post

214 நாட்களில் 76 ’’டமால் டுமீல்’’ : 41 பேர் பலி

Next Post

சீனா: மன அழுத்ததைக் குறைக்க குழந்தைகளின் சூப்பி; இளைஞர்களை எச்சரிக்கும் மருத்துவர்கள்!

Next Post
சீனா: மன அழுத்ததைக் குறைக்க குழந்தைகளின் சூப்பி; இளைஞர்களை எச்சரிக்கும் மருத்துவர்கள்!

சீனா: மன அழுத்ததைக் குறைக்க குழந்தைகளின் சூப்பி; இளைஞர்களை எச்சரிக்கும் மருத்துவர்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin