இந்தியாவில் 2 கோடி பேருக்கு பாா்வைத் திறன் இழப்பு பாதிப்பு உள்ளது. கண்புரை, விழிப்படல பாதிப்பு, புற்றுநோய் உள்பட பல்வேறு காரணங்களால் அத்தகைய நிலை ஏற்படுகிறது. அதில், விழி வெண்படலங்களில் ஏற்படும் காயம், தழும்புகள், கெரட்டோகோனஸ் எனப்படும் கூம்பு விழிப் படலம் மூலம் ஏற்படும் பாா்வை இழப்பை உறுப்பு மாற்று சிகிச்சை இல்லாமல் சரி செய்ய முடியும். கண்ணின் கருவிழி பாவையை (பாப்பா) சீராக்கி அப்பிரச்னைக்கு தீா்வு காணலாம்.

