Last Updated:
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா லண்டனுக்கு குடிபெயர்ந்ததற்கான காரணத்தை டாக்டர் ஸ்ரீராம் நேனே தெரிவித்துள்ளார்.
அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலி ஏன் லண்டனுக்கு குடிபெயர்ந்தார்கள் என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.
அனுஷ்கா சர்மாவும் விராட் கோலியும் முதன்முதலில் 2013ஆம் ஆண்டு ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தின் படப்பிடிப்பின் போது சந்தித்தனர். இதையடுத்து காதலில் விழுந்த அவர்கள், தங்கள் உறவை ரகசியமாகவே வைத்திருந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும், 2017ஆம் ஆண்டு இத்தாலியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
இதனையடுத்து, கடந்த 2024ஆம் ஆண்டு இந்த இணையர் இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் குடிபெயர்ந்தனர். இது நெட்டிசன்களிடையே காரசார விவாதத்தை ஏற்படுத்தியது. தங்களின் பணிக்காக அவர்கள் இந்தியா வந்தாலும், தங்களுக்குப் பேரும் புகழும் கொடுத்த தாய்நாட்டை விட்டு வேறு நாட்டிற்கு செல்கிறீர்களே என்ற கேள்வியை சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் கேட்டு வந்தார்கள்.
இந்த நிலையில், இவர்கள் குடிபெயர்ந்ததற்கான காரணத்தை டாக்டர் ஸ்ரீராம் நேனே தெரிவித்துள்ளார். மாதுரி தீக்ஷித்தின் கணவரான இவர், யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியாவுடன் ஒரு பாட்கேஸ்டில் பேசினார்.
அப்போது விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா குறித்து பேசிய அவர், “அவர்களால் (விராட் கோலி – அனுஷ்கா சர்மா) அவர்களின் வெற்றியை இங்கு அனுபவிக்க முடியாது என்பதால் அந்த இணையர் லண்டனுக்கு குடிபெயர்ந்தனர். அவர்கள் இங்கு எது செய்தாலும் அது அனைவரின் கவனத்தையும் பெறும்.
இதையும் படிக்க: ஐபிஎல் தொடரின் சிறந்த கேட்ச் இதுதானா? சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மெண்டிஸ்
இங்கு அவர்களுக்கு அனைவரின் கவனமும் இல்லாமல், ஒரு சாதாரண முறையில் குழந்தைகளை வளர்க்க வேண்டும். எனவே தான் அவர்கள் லண்டனுக்கு குடிபெயர்ந்துள்ளார்கள்.” எனத் தெரிவித்தார்.
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு கடந்த 2021ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அவர்கள் வாமிகா எனப் பெயரிட்டனர். இதையடுத்து கடந்த 2024 பிப்ரவரி மாதம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அவர்கள் அகேய் என்று பெயரிட்டனர்.
April 26, 2025 4:53 PM IST


