Last Updated:
ஐபிஎல் தொடரில் விளையாடிய ஒருவர் அதே தொடரில் நடுவராக நியமிக்கப்படுவது என்பது இதுவே முதல் முறையாகும்.
விராட் கோலியுடன் 19 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிய வீரர் ஐபிஎல் தொடரில் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஐபிஎல் தொடரிலும் விளையாடி உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
ஐபிஎல் தொடரில் விளையாடிய வீரர் ஒருவர் அதே தொடரில் நடுவராக நியமிக்கப்படுவது என்பது இதுவே முதன் முறையாகும்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் சனிக்கிழமை அன்று மார்ச் 22ஆம் தேதி கோலாலமாக தொடங்க உள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இதனைத் தொடர்ந்து மறுநாள் நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நடுவர்களில் ஒருவராக தன்மய் ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பின்னணி குறித்த தகவல்கள் இணையத்தில் தற்போது கவனம் பெற்று வருகிறது. இவர் விராட் கோலி உடன் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் விளையாடியுள்ளார்.
2007 இல் நடந்த இந்த உலகக் கோப்பை தொடரில் 262 ரன்களை ஸ்ரீவஸ்தவா குவித்துள்ளார். அந்த தொடரில் இவர்தான் அதிக ரன்களை எடுத்தவர் என்பது கவனிக்கத்தக்கது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த இறுதிப் போட்டியில் ஸ்ரீவஸ்தவா 43 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இதன் பின்னர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 2008 முதல் 2009 வரை பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார்.
இதையும் படிங்க – பஞ்சாப் அணியின் கேப்டனாக என் இலக்கு இதுதான் – ஷ்ரேயாஸ் ஐயர் ஓபன் டாக்
அதனைத் தொடர்ந்து டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிகளில் விளையாட ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவரை ஐபிஎல் தொடரில் நடுவராக நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடிய ஒருவர் அதே தொடரில் நடுவராக நியமிக்கப்படுவது என்பது இதுவே முதல் முறையாகும்.
March 19, 2025 8:37 PM IST


