Last Updated:
ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற 5-ஆவது நாளில் விராட் கோலி ஓய்வை அறிவித்தார்.
விராட் கோலிக்காக மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை பார்த்ததாக பிரபல நடிகை ஒருவர் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடை பெற்றுள்ளார்.
ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற 5-ஆவது நாளில் விராட் கோலி ஓய்வை அறிவித்தார். கடந்த சில மாதங்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியால் டெஸ்ட் போட்டிகளில் ஜொலிக்க முடியவில்லை. குறிப்பாக, உள்ளூரில் நடைபெற்ற நியூசிலாந்து அணியுடன் போட்டியில் கோப்பையை இழந்தது, ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் தோல்வி அடைந்தது ஆகியவற்றில் இவ்விரு வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததும் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த நிலையில் இரு வீரர்களும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்கள். 2027 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு தயார் ஆகுவதற்காக இவ்விரு வீரர்களும் போட்டிகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், விராட் கோலியின் ஓய்வு அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த பிரபல நடிகையும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் இணை உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா, “விராட் கோலிக்காக மட்டும் தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை பார்த்தேன்” என்று எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.
அவர் இல்லாமல் டெஸ்ட் போட்டிகள் சுவாரஸ்யமாக இருக்குமா என்று சொல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளார் ப்ரீத்தி ஜிந்தா. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விராட் கோலி 9230 ரன்கள் குவித்துள்ளார். இவற்றில் 30 சதங்கள் அடங்கும்.
May 13, 2025 11:01 PM IST


