Last Updated:
படகில் இருந்தவர்கள் நீரில் மூழ்கினர். உடனடியாக அங்கிருந்தவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். சுயநினைவின்றி இருந்தவர்களை சிபிஆர் முறை மூலம் காப்பாற்ற அங்கிருந்த மீட்புப்படையினர் முயன்றனர்.
வியட்நாம் படகு விபத்தில் 8 தமிழர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.
வியட்நாம் நாட்டில் இந்தியர்கள் பலர் பயணித்த சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் பழனியை சேர்ந்த ஒருவர் உட்பட தமிழர்கள் 8 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் பு குவாக் தீவுக்கு அருகே இன்று காலை சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று சென்றது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 பேர் மற்றும் ஆந்திரா, தெலங்கானாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உட்பட 32 பேர் அதில் பயணம் செய்ததாக தெரிகிறது. தீவுக்கு தெற்கு பகுதியில் பயணித்த போது அந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், படகில் இருந்தவர்கள் நீரில் மூழ்கினர். உடனடியாக அங்கிருந்தவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். சுயநினைவின்றி இருந்தவர்களை சிபிஆர் முறை மூலம் காப்பாற்ற அங்கிருந்த மீட்புப்படையினர் முயன்றனர்.
இந்த விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த 44 வயதான முருகபிரபுவும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முருகபிரபு மற்றும் நிர்மல்குமார் ஆகிய இருவரும் பழனியில் லாவா செல்போன் நிறுவனத்தின் விநியோகஸ்தர்களாக இருந்தனர். இவர்களது சிறப்பான வணிக செயல்பாட்டிற்காக, அந்த நிறுவனம் சார்பில் வியட்நாம் நாட்டிற்கு சுற்றுலா அழைத்துச் சென்றது. இந்நிலையில் முருகபிரபு படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவரும் பணிகள் நடந்துவருவதாக இந்திய தூதரக அதிகாரிகள் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, விபத்தில் உயிர் பிழைத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நிர்மல் குமார் நியூஸ் 18 தமிழுக்கு அளித்த பேட்டியில், விபத்தில் உயிரிழந்த பெரும்பாலானோர் தமிழர்கள் தான் என்கிற அதிர்ச்சியை பகிர்ந்துகொண்டார். சுற்றுலா அழைத்துச் சென்ற செல்போன் நிறுவனம் தான் இந்த படகு சவாரியையும் ஏற்பாடு செய்ததாக கூறிய அவர், விபத்தில் சிக்கிய 30 பேரில் 20 பேருக்கும் அதிகம் தமிழர்கள் தான் என்றும் இதுவரை 8 தமிழர்கள் வரை உயிரிழந்திருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


