சமூக ஊடக வழியில் செல்வாக்கு மிக்கவரும் விமானப் பணிப்பெண்ணுமான 27 வயதுமிக்க ரோஷ்னி சோங்காரே (Roshni Songhare) ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தார்.
ரோஷ்னி வேலைக்காக அகமதாபாத் செல்வதற்கு சென்றார் என்றும், அதற்கு ஒரு நாள் முன்பு தான் தனது குடும்பத்தினரிடம் இருந்து விடைபெற்றார் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அவருக்கு தந்தை, தாய் மற்றும் சகோதரர் உள்ளனர்.
விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்பதே அவரின் வாழ்நாள் கனவாகவும் லட்சியமாகவும் இருந்தது. தனக்கு நிதி நெருக்கடிகள் இருந்தபோதிலும் மும்பையில் தனது கல்வியை முடித்தார் ரோஷ்னி.
மேலும் அவரின் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியின் காரணமாக விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்ற தனது வாழ்நாள் கனவை அவர் நிறைவேற்றினார்.
விமான விபத்தில் ரோஷ்னி இறந்ததை நேற்று (ஜூன் 12) X தள பதிவில் ரவீந்திர சவான் என்ற அரசியல்வாதி உறுதிப்படுத்தினார்.
அகமதாபாத்தில் நடந்த விமான கோரவிபத்தில் டோம்பிவ்லியைச் சேர்ந்த திருமதி ரோஷ்னி சோங்காரேவும் மரணித்த செய்தி எங்களுக்கு மிகுந்த வருத்தமளிப்பதாகவும், ஓர் அர்ப்பணிப்புள்ள விமானக் குழு உறுப்பினரின் அகால மரணம் மனதைப் உடைப்பதாகவும், அவரது ஆன்மா நித்திய சாந்தியடையட்டும் என்றும் அவர் கூறினார்.
அந்த போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தில் இருந்த 242 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களில் சோங்காரேவும் ஒருவர்.
மொத்தம், 12 விமான பணியாளர்கள், 69 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் நாட்டவர்கள், ஒரு கனடா நாட்டவர் மற்றும் ஏழு போர்த்துகீசிய நாட்டவர்கள் விமானத்தில் இருந்தனர்.
CNN செய்தி நிறுவனத்திம் கூறுகையில், ஏர் இந்தியா விமான கோர விபத்தில் குறைந்தது 290 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நாடு

