கோலாலம்பூர்
பினாங்கு மாநிலம் Butterworth பகுதியில் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமுற்றவருக்கு உதவ முனைந்த ஒருவர், அதே விபத்தில் சிக்கிய சந்தேக நபரால் திடீரெனத் தாக்கப்பட்டதால், சம்பவ இடத்தில் பெரும் மோதல் ஏற்பட்டது.
இந்த நிகழ்வின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
விபத்தில் சிக்கிய நபர் தரையில் படுத்திருந்த நிலையில், அவருக்கு உதவ சென்றதாகவும், ஆனால் அவர் திடீரென எழுந்து ப அடித்ததோடு, அங்கு இருந்த சிலரை மோதலில் ஈடுபட தூண்டியதாகவும் புகாரளித்தவர் கூறியதாக செபராங் பிறை உத்தாரா (Seberang Perai Utara) மாவட்டக் காவல் துறைத் தலைவர் ஏ.சி.பி. அன்வார் அப்துல் ரஹ்மான் (ACP Anuar Abdul Rahman) இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“முதற்கட்ட விசாரணையில், சம்பவ இடத்தில் இருந்த ஒருவரின் புண்படுத்தும் வார்த்தைகள் அந்த நபரை த் தூண்டியிருக்கலாம் என நம்பப்படுகிறது,” என்றார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 147 (கலவரம்)-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது. சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் காணவும், கைது செய்யவும் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
பொதுமக்கள் இந்த விவகாரத்தை மிகைப்படுத்திப் பேசுவதைத் தவிர்க்குமாறு போலீஸ் எச்சரித்தத்துடன் , சம்பவம் தொடர்பான தகவல்கள் உள்ளவர்கள் உடனடியாக காவல்துறையுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.




