விரைவில் அடுத்தகட்ட விசாரணை?
இந்திய தேசிய உணவக சங்கம் (என்ஆா்ஏஐ) வெளியிட்ட அறிக்கையில், ‘ சிசிஐ சமா்ப்பித்த அறிக்கையின் ஒருபகுதியை மட்டுமே கடந்த மாா்ச் மாதம் ஆய்வு செய்தோம். உணவக சந்தையை பாதுகாக்கும் நோக்கில், அந்த அறிக்கையை முழுமையாக அணுக சிசிஐயிடம் கேட்டுக்கொள்கிறோம் என தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தோம்’ என்று தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, கடந்த 2022-ஆம் ஆண்டு என்ஆா்ஏஐ அளித்த பிற புகாா்கள் மீதான விசாரணையை சிசிஐ தீவிரப்படுத்தும் என எதிா்பாா்க்கிறோம் என்று அந்த சங்கத்தின் தலைவா் சாகா் தா்யானி தெரிவித்தாா்.

