Last Updated:
சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்லும் முதல் இந்தியரான சுபான்ஷு சுக்லா, பிரியாணி, இட்லி, அல்வா போன்ற உணவுகளை தன்னுடன் கொண்டு செல்கிறார்.
இந்திய விமானப்படை விமானியான சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி மையத்துக்கு நாளை (புதன்கிழமை) புறப்படுகிறார். இதன் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்லும் முதல் இந்தியர் எனும் பெருமையை சுபான்ஷு சுக்லா பெறுகிறார்.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை இந்தியா செயல்படுத்தவிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் செல்லும் விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களைப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அறிமுகம் செய்தார்.
இவர்கள் சர்வதேச விண்வெளி பயண அனுபவத்தைப் பெறுவதற்காக, இஸ்ரோ பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான ஆக்ஸிம் ஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து “ஆக்சியம் 4” என்ற திட்டத்தை செயல்படுத்துகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், சுபான்ஷு சுக்லாவும், அமெரிக்கா, போலந்து, ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் செவ்வாய்க்கிழமை சர்வதேச விண்வெளி மையத்துக்குச் செல்வதற்கு திட்டமிடப்பட்டது.
நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, எலான் மஸ்கு-க்குச் சொந்தமான பால்கன்-9 ராக்கெட் மூலம் நாளை விண்வெளிக்குச் செல்ல இருக்கின்றனர்.
இந்நிலையில், விண்வெளி செல்லும் சுபான்ஷு சுக்லா, பிரியாணி, இட்லி, அல்வா போன்ற உணவுகளை தன்னுடன் கொண்டு செல்கிறார் எனும் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரோ மற்றும் DRDO இணைந்து விண்வெளி சூழலுக்கு ஏற்றார்போல் பிரத்யேகமாகத் தயாரித்து அனுப்புகிறது எனும் தகவலும் வெளியாகியுள்ளது.
June 10, 2025 9:30 PM IST
விண்வெளிக்கு பிரியாணியை எடுத்துச் செல்லும் சுபான்ஷு சுக்லா.. பிரத்யேகமாக தயாராகும் உணவு


