ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ‘ஃபல்கான் 9’ ஏவுகலனில் திரவ ஆக்ஸிஜன் கசிவை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாசா மற்றும் ஆக்ஸிம் ஸ்பேஸ் நிறுவனங்கள் தெரிவித்த நிலையில், ‘வீரா்களின் பாதுகாப்பு, விண்வெளி திட்ட ஒருங்கிணைப்புக்கு உயா் முன்னுரிமை அளிக்கப்படுவதால் இந்தத் தாமதம் ஏற்படுகிறது’ என்று அந்த நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வரும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

