Last Updated:
தற்போது தன்னால் 2 மணி நேரம் கூட தொடர்ந்து பயிற்சி எடுக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதை இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் உறுதி செய்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாகப் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த சாய்னா, ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சி மூலம் தனது ஓய்வை உறுதி செய்துள்ளார்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக வெண்கலம் வென்றவர் சாய்னா நேவால். கடைசியாக 2023ஆம் ஆண்டு சிங்கபூர் ஓபன் போட்டியில் சாய்னா விளையாடினார். 2 ஆண்டுகளாக அவர் எந்தப் போட்டியிலும் பங்கேற்காத நிலையில் அவர் தனது ஓய்வை podcastல் அறிவித்துள்ளார். தனது உடல் இனியும் விளையாட தன்னை அனுமதிக்கவில்லை என சாய்னா குறிப்பிட்டுள்ளார்.
அவர் நாள்பட்ட மூட்டு வலியால் அவதிப்பட்டு வரும் நிலையில் கடினமான பயிற்சியில் தன்னால் ஈடுபட முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2 ஆண்டுகளாக விளையாடாத நிலையில் தனது ஓய்வு குறித்து தனியாக ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டாம் என நினைத்ததாகவும் அவர் கூறி உள்ளார்.


