மலேசியாவில் உள்ள ஒரு விடுதியில் 17 வயது கல்லூரி மாணவர் ஒருவர் ஸ்மார்ட்ஃபோன் சார்ஜரால் அடித்துக் கொல்லப்பட்டார்.
சக மாணவர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
16 முதல் 19 வயதுக்குட்பட்ட 13 மாணவர்களை சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் ஸ்மார்ட்ஃபோன் சார்ஜரையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

