விஜயகாந்த்திடம் இருந்து பிரிவு
2016 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்க வேண்டும் என்று கட்சித் தலைமையிடம் வலியுறுத்தினார். தேமுதிக, மதிமுக, கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சேர்ந்து மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கியது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள் சிலருடன் திமுகவிற்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். ‘மக்கள் தேமுதிக’ என்ற தனி அமைப்பை ஏற்படுத்தி, திமுக ஆதரவுடன் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியினார். அத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவிடம் தோல்வி அடைந்தார்.

