மகாராஷ்டிர மாநிலத்தின் தாணே மாவட்டத்தில் நீதிமன்ற அறையிலிருந்து விசாரணைக் கைதியை தப்பிக்க வைக்க முயன்ற 19 வயது நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாணேவின் கல்யான் நீதிமன்றத்தில் நேற்று (ஜன.28) மதியம் ஆஜர் படுத்தப்பட்ட விசாரணைக் கைதியான நாகேஷ் தண்டே என்பவரின் நண்பரான சுஜித் குப்தா என்பவர் நாகேஷை தப்பிக்க வைக்கும் முயற்சியில் நீதிமன்ற அறையினுள் செய்கையில் அவரிடம் பேச முயன்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது, அவரை அங்கிருந்து வெளியேறக்கூறிய காவல் துறையினரை குப்தா தாக்கி கீழே தள்ளியுள்ளார். அப்போது, அங்கு ஏற்பட்ட தள்ளுமுள்ளைப் பயன்படுத்தி நாகேஷை காவலர்களிடம் இருந்து விடுவிக்க முயற்சி செய்துள்ளார்.
இதையும் படிக்க: மண்டை ஓடுகளைத் திருடிய 2 பேர் கைது!

