• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வாடகை வீட்டு உரிமைகள் பாதுகாப்பு: மக்கள் கருத்துக்கு மேலும் ஒரு மாத கால அவகாசம் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
February 4, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வாடகை வீட்டு உரிமைகள் பாதுகாப்பு: மக்கள் கருத்துக்கு மேலும் ஒரு மாத கால அவகாசம் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



வாடகை ஒப்பந்த காலம் முடிவடைவதற்கு முன்பாக குடியிருப்பாளர்களை சட்டவிரோதமாக வீட்டிலிருந்து வெளியேற்றுவதைத் தடுக்கும் நோக்கில் ‘குடியிருப்பாளர்களை பாதுகாக்கும் சட்டமூலம்’ தயாரிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலத்திற்கு தொடர்பாக அனைத்து தரப்பினரிடமிருந்தும் யோசனைகளைப் பெற மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் சட்டதிருத்த ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர், குறித்த சட்டமூலம் முதலாம் வாசிப்பிற்காக ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சட்டமூலத்தை முழுமையாக ஆய்வு செய்யாமல் சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களின் அடிப்படையில் அரசியல் நோக்கங்களுடன் விமர்சனம் செய்யக்கூடாது என்றும் அவர் கூறினார்.

இந்த சட்டமூலம் அமல்படுத்தப்பட்டால் வீட்டு உரிமையாளர்கள் வீடுகள் அல்லது வர்த்தக நிலையங்களை வாடகைக்கு வழங்க முடியாது என்ற கருத்து தவறானதாகும் என அமைச்சர் தெரிவித்தார். ஒப்பந்த அடிப்படையில் வீடு வாடகைக்கு வழங்கப்பட்டால், ஒப்பந்த காலம் முடிந்தவுடன் குடியிருப்பாளர் வெளியேற வேண்டும். அவ்வாறு வெளியேறாத சந்தர்ப்பங்களில் வீட்டு உரிமையாளர்களுக்கு சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் விளக்கினார்.

அதேவேளை, நீதிமன்ற உத்தரவு இன்றி பலவந்தமாக குடியிருப்பாளர்களை வெளியேற்றுவதைத் தடுக்கும் நோக்கத்திலேயே இந்த சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வீட்டு உரிமையாளர்களும் குடியிருப்பாளர்களும் இருவரும் பாதுகாப்பைப் பெறுவார்கள் என அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த சட்டமூலம் 2025 செப்டம்பர் 17ஆம் தேதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டதுடன், இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் எந்த வழக்கும் தாக்கல் செய்யப்படவில்லை. மேலும் 2025 நவம்பர் 4 முதல் 2026 ஜனவரி 16 வரை மும்மொழிகளிலும் பத்திரிகைகள் மூலம் சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சட்டமூலத்தை விரைவாக அமல்படுத்த வேண்டும் என பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் கிடைத்துள்ளதாகவும், சட்டத்தரணிகள் சங்கத்திடம் யோசனைகள் கோரப்பட்டு அவை தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். மக்கள் பங்கேற்புடன் வெளிப்படையாக இந்த சட்டமூலம் முன்னெடுக்கப்படுவதாகவும், அனைவரின் கருத்துகளையும் பெறும் நோக்கில் மேலதிக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

கிரீன் கார்டு இருந்தாலும் வெளிநாட்டவர்களுக்கு இனி வணிக கடன்கள் கிடையாது… அமெரிக்கா அதிரடி! | Makkal Osai

Next Post

தேச முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து பங்களிக்க வேண்டிய தருணம் – பிரதமர்  – Sri Lanka Tamil News

Next Post
தேச முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து பங்களிக்க வேண்டிய தருணம் – பிரதமர்  – Sri Lanka Tamil News

தேச முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து பங்களிக்க வேண்டிய தருணம் – பிரதமர்  - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin