• Login
Wednesday, December 24, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“வாக்கு திருட்டால் பிரதமரானவர் நேரு…” – ராகுல் காந்திக்கு அமைச்சர் அமித்ஷா பதில் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
December 10, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“வாக்கு திருட்டால் பிரதமரானவர் நேரு…” – ராகுல் காந்திக்கு அமைச்சர் அமித்ஷா பதில் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 10, 2025 6:43 PM IST

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அமைச்சர் அமித் ஷா, நாட்டில் முதலில் வாக்குத் திருட்டில் ஈடுபட்டது முன்னாள் பிரதமர் நேரு எனத் தெரிவித்துள்ளார்.

News18
News18

வாக்குத் திருட்டு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் சூழலில், முன்னாள் பிரதமர் நேரு தான் முதன்முதலில் வாக்குத் திருட்டில் ஈடுபட்டது என அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி குறித்தும், அதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பது குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திவந்தன. இதன் காரணமாக கடந்த 1ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுவந்ததால், அவை தொடர்ந்து முடங்கி வந்தது. இதனையடுத்து, டிசம்பர் 8ஆம் தேதி திங்கள்கிழமை வந்தே மாதரம் 150வது ஆண்டு குறித்தான விவாதமும், 9ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தேர்தல் சீர்திருத்தம் குறித்தான விவாதமும் நாடாளுமன்றத்தில் நடைபெறும் என முடிவானது.

அதன்படி, கடந்த 8ஆம் தேதி வந்தே மாதரம் 150வது ஆண்டு விழா விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று (9ஆம் தேதி) தேர்தல் சீர்திருத்தம் குறித்தான விவாதம் தொடங்கியது. இதில் பேசிய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “தேர்தல் ஆணையர்கள் தண்டிக்கப்பட முடியாதபடி சட்டம் மாற்றப்பட்டுள்ளது. 45 நாட்களுக்குப் பிறகு சிசிடிவி வீடியோக்களை அழிக்க ஏன் தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. பிரேசில் பெண் ஒருவர் ஹரியானாவில் வாக்காளர் பட்டியலில் உள்ளார்.

தேர்தல் ஆணையர் தேர்வு குழுவில் பிரதமர், மத்திய துறை அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என நான் இருக்கிறேன். எனக்கு அந்தக் குழுவில் எந்த அதிகாரமும் இல்லை” எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

தொடர்ந்து இன்று நாடாளுமன்ற மக்களவையில் விவாதத்தின் மீது பதில் கொடுத்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “எஸ்.ஐ.ஆர். குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. ஆனால், நாடாளுமன்றத்தில் எஸ்.ஐ.ஆர். குறித்து விவாதிக்க முடியாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். எஸ்.ஐ.ஆர். என்பது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. இந்தியத் தேர்தல் ஆணையமும், ஆணையரும் அரசின் கீழ் பணியாற்றுபவர்கள் கிடையாது. ஒருவேளை நாடாளுமன்றத்தில் எஸ்.ஐ.ஆர். தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டால், அதற்கு யார் பதிலளிப்பது?” எனக் கேள்வி எழுப்பினார்.

#WATCH | Speaking on electoral reforms, in Lok Sabha, Union HM Amit Shah says, “I would like to tell you about 3 incidents of voter chori. First, after independence, the PM of the country was to be elected…Sardar Patel got 28 votes and Jawaharlal Nehru got 2 votes. But… pic.twitter.com/PaHocH0lzw


— ANI (@ANI) December 10, 2025

தொடர்ந்து பேசிய அமித்ஷா, “நாட்டில் நடந்த முதல் வாக்காளர் திருட்டு பற்றி இங்கு சொல்ல விரும்புகிறேன். சுதந்திரத்திற்குப் பிறகு, நாட்டின் முதல் பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும். சர்தார் வல்லபாய் படேல் 28 வாக்குகளைப் பெற்றார். நேரு 2 வாக்குகளை மட்டுமே பெற்றார். ஆனால், நேரு நாட்டின் பிரதமரானார்” எனத் தெரிவித்தார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

December 10, 2025 6:43 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

“சுதந்திர இந்தியாவில் முதல் வாக்குத் திருட்டில் ஈடுபட்டது நேரு..” – நாடாளுமன்றத்தில் அமித்ஷா பரபரப்பு

Read More

Previous Post

Tamilmirror Online || A/L பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

Next Post

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி; அர்ஜென்டினாவை ஆட்டம் காணவைத்த இந்தியா! வெண்கலம் வென்று அசத்தல் | விளையாட்டு

Next Post
ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி; அர்ஜென்டினாவை ஆட்டம் காணவைத்த இந்தியா! வெண்கலம் வென்று அசத்தல் | விளையாட்டு

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி; அர்ஜென்டினாவை ஆட்டம் காணவைத்த இந்தியா! வெண்கலம் வென்று அசத்தல் | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin