Last Updated:
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வாக்கு திருட்டு முறைகேட்டை மறைப்பதற்காகவே வாக்காளர் சிறப்பு திருத்தப் பட்டியல் பணி நடைபெறுகிறது என குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
வாக்குத் திருட்டை மறைப்பதற்காகவே வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் பச்மார்ஹி பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளதாகக் கூறினார். 8-ல் ஒரு வாக்கு திருடப்பட்டுள்ளது என்றும், தரவுகளைப் பார்த்த பிறகு மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரத்திலும் வாக்குத் திருட்டு நடந்துள்ளதாகச் சந்தேகம் எழுவதாகவும் ராகுல் தெரிவித்தார்.
இந்நிலையில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பதிலளித்துள்ளார். அதில், பிகார் மக்கள் ராகுல் காந்தியை மீண்டும் இத்தாலிக்கே அனுப்பி விடுவார்கள் என்றார். மேலும் மகாகத்பந்தன் கூட்டணியை பிகார் மக்கள் நிராகரித்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
#WATCH | Pachmarhi, MP: Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi says, “Vote chori has been done clearly. 25 lakh votes have been stolen. Every one out of 8 votes has been stolen. After seeing the data, I believe the same has happened in Madhya Pradesh, Chhattisgarh and… pic.twitter.com/zpVrQOBHUh
— ANI (@ANI) November 9, 2025
முன்னதாக கடந்த 5-ஆம் தேதி டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஹரியானா மாநிலத்தில் வாக்கு மோசடி நடந்துள்ளது எனத் தெரிவித்தார். மேலும், அதற்கு ஆதாரம் எனக் கூறி, ஹரியானாவில் பிரேசிலைச் சேர்ந்த இளம் மாடல் ஒருவரின் புகைப்படத்துடன் 22 வாக்குகள் பதிவாகி இருப்பதாக ராகுல் காந்தி ஆதாரத்தை வெளியிட்டார். தொடர்ந்து பேசிய அவர், இதே போன்று, 2 வாக்குச்சாவடிகளில் ஒரு பெண்ணின் விவரங்கள் மட்டும் 223 முறை பதிவு செய்யப்பட்டு இருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் போலியானவை என்று ராகுல் காந்தி கூறினார். 8 வாக்காளர்களில் ஒருவர் போலி என்று கூறிய ராகுல் காந்தி, இதற்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
November 09, 2025 3:43 PM IST
“வாக்குத் திருட்டை மறைப்பதற்கே SIR” – எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு


