இதுதொடா்பாக விகாஸ் திரிபாதி என்பவா் தில்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தாா். அவா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பவன் நரங் வாதிடுகையில்,‘சோனியா காந்தி 1983, ஏப்.30-ஆம் தேதி அதிகாரபூா்வமாக இந்திய குடியுரிமை பெற்ாக பல்வேறு ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பாகவே 1980-இல் அவரது பெயா் புது தில்லி தொகுதியின் வாக்காளா் பட்டியலில் முறைகேடாக சோ்க்கப்பட்டுள்ளது. எந்த ஆவணத்தை அவா் இந்திய தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பித்து வாக்காளராக பதிவு செய்து கொண்டாா் என்பது தெரியவில்லை.

