Courtesy: kapil
வவுனியா புளியங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக
புளியங்குளம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த சம்பவமானது நேற்று நள்ளிரவு இடம்பெற்றிருந்தது.
முல்லைத்தீவில் இருந்து குருணாகல் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் முன்னே
சென்ற துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலி
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் துவிச்சக்கர வண்டி சாரதி
படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன்,
மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றையவர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குருணாகல் பகுதியை சேர்ந்த 59 வயதுடைய உமர் லெப்பை அப்துல் ரவூப் என்பவரே
விபத்தில் பலியாகியுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா, புளியங்குளம் காவல்துறையினர்
மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

