ரஷ்யாவில் யூத வழிபாட்டுத் தலங்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மதகுரு உள்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேற்று (23.06.2024) ரஷ்யாவில் உள்ள தேவாலயங்கள் மற்றும் யூத வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில், வடக்கு காகஸ் பகுதியில் உள்ள தாகெஸ்தான் பகுதியில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன. பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தபோது திடீரென தேவாலயம் மற்றும் யூத வழிபாட்டுத் தளங்களுக்குள் நுழைந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள், மக்களை நோக்கி கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினர்.
மக்கள் அலறியடித்து ஓடிய நிலையில், மகாச்காலா பகுதியில் உள்ள தேவாலயம் மற்றும் யூத வழிபாட்டுத் தளங்கள் தீப்பற்றி எரியத் தொடங்கின. சம்பங்களின்போது, அங்கு கூடியிருந்த மக்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், யூத மதகுரு ஒருவர் உயிரிழந்தார். அதேபோல், டெர்பெண்டில் உள்ள தேவாலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
பின்னர் தப்பியோடிய கும்பல், அருகில் இருந்த காவல்நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றது. இதில், காவல்நிலையத்தில் இருந்த 14 போலீசார் உயிரிழந்தனர். ஒட்டுமொத்தமாக 15 பேர் உயிரிழந்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த பயங்கரவாத தாக்குதல் திட்டமிட்டு, ஒரே நேரத்தில் 3 இடங்களில் நடத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ள ரஷ்ய போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட 5 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் தப்பியோடிய சிலரை தேடி வருவதாகவும் கூறியுள்ளனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
