Last Updated:
வளைகுடா போர் காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டது.
இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
வளைகுடா போர் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. அதன்படி புதன்கிழமை மட்டும், மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,342 புள்ளிகள் சரிவடைந்து 76,863 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதேபோல தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 418 புள்ளிகள் சரிவடைந்து 23,843 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்தியப் பங்குகளை விற்று முதலீடுகளைத் திரும்பப் பெற்று வருகின்றனர். மார்ச் மாதத்தில் மட்டும் இதுவரை 32,800 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை நடைபெற்றதும் பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு காரணியாக பார்க்கப்படுகிறது.
பங்குச் சந்தை சரிவு காரணமாக புதன்கிழமை மட்டும் முதலீட்டாளர்கள் 3 லட்சம் கோடி ரூபாயை இழந்தனர். ஒரே நாளில் மும்பை பங்குச் சந்தையின் மதிப்பு 447 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 442 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்தது.


