• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

‘வளர்ச்சிக்கு முன்னுரிமை தந்த இரக்கமுள்ள சீர்திருத்தவாதி!’ – மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் புகழஞ்சலி | ‘A compassionate reformer who prioritized development’ – Congress praises Manmohan Singh

GenevaTimes by GenevaTimes
December 27, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
‘வளர்ச்சிக்கு முன்னுரிமை தந்த இரக்கமுள்ள சீர்திருத்தவாதி!’ – மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் புகழஞ்சலி | ‘A compassionate reformer who prioritized development’ – Congress praises Manmohan Singh
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: நாட்டின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்த இரக்கமுள்ள, சீர்திருத்தவாதத் தலைவர் என்றும், கருணை, பணிவு, கண்ணியம் ஆகிய அரிய பண்புகளைக் கொண்ட தலைவர் என்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் செயற்குழு புகழாரம் சூட்டியுள்ளது.

மன்மோகன் சிங்கின் மறைவை அடுத்து காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் கூடியது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ் செயற்குழுவின் இரங்கல் தீர்மானம் வெளியிடப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இந்தியாவின் தலைவிதியை ஆழமாக வடிவமைத்த உண்மையான ராஜதந்திரியாகத் திகழ்ந்த டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு காங்கிரஸ் செயற்குழு இரங்கல் தெரிவிக்கிறது. மன்மோகன் சிங் இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதார துறைகளில் ஒரு உயர்ந்த நபராக இருந்தார். அவருடைய பங்களிப்புகள் நாட்டை மாற்றியமைத்தது. அதோடு, உலகளவில் அவருக்கு மரியாதையைப் பெற்றுத் தந்தது. 1990-களில் நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கலின் சிற்பியாக இருந்தார்.

ஒப்பிடமுடியாத தொலைநோக்குப் பார்வையுடன், அவர் தொடர் சீர்திருத்தங்களை மேற்கொண்டார். இது தேசத்தை நெருக்கடியிலிருந்து காப்பாற்றியது மட்டுமல்லாமல், உலகளாவிய சந்தைகளுக்கான கதவுகளையும் திறந்தது. கட்டுப்பாடு நீக்கம், தனியார்மயமாக்கல், அன்னிய முதலீட்டை ஊக்குவித்தல் போன்ற கொள்கைகள் மூலம் இந்தியாவின் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார். அவரது தலைமையின் கீழ், இந்தியா உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக உருவெடுத்தது. இது அவரது புத்திசாலித்தனம் மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு சான்றாகும்.

இந்தியாவின் 13வது பிரதமராக, மன்மோகன் சிங் அமைதியுடனும், உறுதியுடனும், விதிவிலக்கான ஞானத்துடனும் நாட்டை வழிநடத்தினார். நீடித்த பொருளாதார வளர்ச்சி, உலகளாவிய அங்கீகாரம் மற்றும் சமூக முன்னேற்றம் ஆகியவற்றால் அவரது பதவிக்காலம் குறிக்கப்பட்டது. 2008ல் உலக நிதி நெருக்கடியின் சவால்களுக்கு மத்தியில், அதன் மோசமான விளைவுகளிலிருந்து இந்தியாவை பாதுகாக்கும் உத்திசார் நடவடிக்கைகளின் மூலம் அவர் நாட்டை வழிநடத்தினார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், கல்வி உரிமை, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தோ-அமெரிக்க ஒப்பந்தம் போன்ற குறிப்பிடத்தக்க முயற்சிகளை அவரது தலைமை கண்டது. சிவில் அணுசக்தி ஒப்பந்தம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், நிலம் கையகப்படுத்தும் சட்டம், விவசாயக் கடன் தள்ளுபடி, கடன் நிவாரணத் திட்டம், 93வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிக்களுக்குப் பிரிவு 15(5) மூலம் சமூக நீதியை மேம்படுத்தியது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தியது, பழங்குடியின சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக வன உரிமைச் சட்டம் என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தவர் மன்மோகன் சிங்.

அவரது பதவிக் காலத்தில் அதிகபட்ச ஜிடிபி வளர்ச்சி இருந்தது. உள்ளடக்கிய வளர்ச்சி, சர்வதேச இராஜதந்திரம் மற்றும் பொருளாதார நவீனமயமாக்கல் ஆகியவற்றில் மன்மோகன் சிங்கின் அர்ப்பணிப்பு, உலக அரங்கில் இந்தியாவின் நிலையை பலப்படுத்தியது. அதே நேரத்தில், சாதாரண மக்களின் நலனில் கவனம் செலுத்தியது. ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்த இரக்கமுள்ள, சீர்திருத்தவாதத் தலைவராக மன்மோகன் சிங் திகழ்ந்தார் என்ற அவரது பாரம்பரியம் என்றென்றும் இந்திய வரலாற்றில் பொறிக்கப்படும்.

ஒரு ராஜதந்திரி என்பதற்கு அப்பால், மன்மோகன் சிங் ஒரு மரியாதைக்குரிய கல்வியாளராக இருந்தார். பொருளாதார நிபுணராக அவரது வாழ்க்கை இந்தியாவின் கொள்கைகள் மற்றும் திசையை வடிவமைக்க உதவியது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி போன்ற நிறுவனங்களில் அவர் செய்த சேவை, பின்னர் அவர் கொள்கை வகுப்பாளராக உருவெடுக்கவும், பல பொருளாதார சீர்திருத்தங்களுக்கு அடித்தளம் அமைக்கவும் வழி வகுத்தது.

பொருளாதாரம் பற்றிய ஆழமான புரிதல் கொண்டவராக மன்மோகன் சிங் திகழ்ந்தார். இது எண்ணற்ற மாணவர்கள், அறிஞர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை ஊக்கப்படுத்தியது. இந்தியாவின் வளர்ச்சிக்கான அணுகுமுறையை வடிவமைப்பதில் அவரது கல்வி மற்றும் அறிவுசார் பங்களிப்புகள் முக்கிய பங்கு வகித்தன. அவரது வழிகாட்டுதல் நாட்டின் எதிர்கால பொருளாதார வல்லுநர்கள் மீது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன்மோகன் சிங் அசாதாரணமான தனிப்பட்ட குணங்களைக் கொண்டவர். அவரது கருணை, பணிவு, கண்ணியம் ஆகியவை அவரை அரிய பண்புகள் கொண்ட தலைவராக வேறுபடுத்திக் காட்டியது. நாட்டில் மிக உயர்ந்த பதவிகளை வகித்த போதிலும், அவர் எப்போதும் பணிவுடன் இருந்தார், அனைவரையும் மரியாதையுடனும் கருணையுடனும் நடத்தினார். அவரது நடத்தை அமைதியாகவும், ஆழமான ஒருமைப்பாட்டால் வழிநடத்தப்பட்டதாகவும் இருந்தது.

அவர் தனது அறிவாற்றல் மற்றும் சாதனைகளுக்காக மட்டுமல்ல, அவரது பணிவான இயல்புக்காகவும் பாராட்டப்பட்டார். இது அவரை அனைத்து தரப்பு மக்களுக்கும் பிரியமானவராக மாற்றியது. இரக்கம், நேர்மை மற்றும் பொது சேவையில் ஆழ்ந்த அர்ப்பணிப்பு என ஒரு உண்மையான ராஜதந்திரியின் மிகச் சிறந்த குணங்களை மன்மோகன் சிங் கொண்டிருந்தார். பணிவும் பெரும் ஆற்றலும் எவ்வாறு இணைந்திருக்கும் என்பதற்கு அவரது வாழ்க்கை ஓர் உதாரணம்.

இந்த அசாதாரண தலைவரின் இழப்பிற்காக இரங்கல் தெரிவிக்கும் இந்த நேரத்தில், அவரது நினைவைப் போற்றவும், அவரது நீடித்த பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லவும் காங்கிரஸ் செயற்குழு உறுதியேற்கிறது. பொருளாதார சீர்திருத்தம், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி பற்றிய அவரது தொலைநோக்குப் பார்வை தொடர்ந்து நம்மை ஊக்குவித்து வழிகாட்டும்.

அவரது லட்சியங்கள் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு கலங்கரை விளக்கமாக இருக்கும். அவர் கற்பனை செய்ததைப் போலவே, மிகவும் வளமான மற்றும் ஒன்றுபட்ட இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்கு நாம் உழைக்கும்போது, ​​அவருடைய விழுமியங்களை நிலைநிறுத்த நாம் உறுதியேற்கிறோம். ஒரு ராஜதந்திரி, ஒரு பொருளாதார நிபுணர் மற்றும் எளிமையான மனிதர் என்பதாக மன்மோகன் சிங்கின் மரபு வாழும். நமது பெரிய தேசத்தின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு பங்களிக்க நம் அனைவரையும் ஊக்குவிக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read More

Previous Post

கட்டுநாயக்கவில் கைதான இலங்கை தம்பதி: பின்னணியில் இருந்த காரணம்

Next Post

உள்நாட்டு தளவாட உற்பத்தியில் எம்எஸ்எம்இ நிறுவனங்களை ஊக்குவிப்பது மிக அவசியம்: ராணுவத்துறை செயலாளர்  | essential to encourage MSME s in domestic logistics production Defense Secretary

Next Post
உள்நாட்டு தளவாட உற்பத்தியில் எம்எஸ்எம்இ நிறுவனங்களை ஊக்குவிப்பது மிக அவசியம்: ராணுவத்துறை செயலாளர்  | essential to encourage MSME s in domestic logistics production Defense Secretary

உள்நாட்டு தளவாட உற்பத்தியில் எம்எஸ்எம்இ நிறுவனங்களை ஊக்குவிப்பது மிக அவசியம்: ராணுவத்துறை செயலாளர்  | essential to encourage MSME s in domestic logistics production Defense Secretary

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin