மாத ஊதியம் பெறுவோர் தங்களது வருமான வரி செலுத்தும் முறையை தாங்களே தெரிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. புதிய வருமான வரி விதிப்பு முறை இன்று முதல் அமலுக்கு வந்தாலும் பழையதும் தொடரும் என நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் வருமான வரி செலுத்துவோருக்கான புதிய வரி விதிப்பு முறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் ஒன்றாம் தேதியான இன்று புதிய நிதி ஆண்டு தொடங்கியுள்ள நிலையில், புதிய வருமான வரி முறை மட்டுமே அமலில் இருக்கும் என சமூகவலைத்தளங்களில் செய்தி பரவியது.
இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதில், புதிய வரி வகிதம் Default ஆக இருந்தாலும், வருமான வரி செலுத்துவோர், தங்களது வருமானத்துக்கு ஏற்றப்படி புதிய வரி முறையையோ, பழைய வரி முறையையோ தெரிவு செய்து கொள்ளலாம்.
புதிய வரிவிதிப்பு முறையை தெரிவு செய்தாலும், 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்குத் தாக்கல் செய்யும்வரை மாற்றிக் கொள்ளலாம். தேவைப்பட்டால், ஒவ்வொரு நிதியாண்டிலும் தங்களது வருமானத்துக்கு ஏற்ப பழைய மற்றும் புதிய வரிவிதிப்பு முறைக்கு மாறிக் கொள்ளலாம்
அதேநேரத்தில் வணிகரீதியில் வருவாய் ஈட்டுவோர் ஆண்டுதோறும், வேறு வரிவிதிப்பு முறைக்கு மாறிக் கொள்ள முடியாது. பழைய வரி முறையை ஒப்பிடும் போது, புதிய வரி முறையில் வரி குறைவாக உள்ளதாகவும்,
இதையும் படிங்க:
எதிர் வேட்பாளரே இல்லை.. போட்டியின்றி தேர்வான 10 பாஜக எம்எல்ஏக்கள்.. அருணாச்சல் தேர்தல் நிலவரம்!
புதிய வரி முறையிலும் மாத ஊதியம் பெறுவோருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிரந்தரக் கழிவும், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு 15 ஆயிரம் ரூபாய் நிரந்தர கழிவும் அளிக்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)