• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வருமான வரித்துறையில் இருந்து எந்தெந்த காரணங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்…? அவசியம் தெரிஞ்சுக்கோங்க… | வணிகம்

GenevaTimes by GenevaTimes
November 13, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
வருமான வரித்துறையில் இருந்து எந்தெந்த காரணங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்…? அவசியம் தெரிஞ்சுக்கோங்க… | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 13, 2025 4:12 PM IST

எந்தவிதமான கேள்விகளும் உங்கள் மீது எழாமல் இருப்பதற்கு பணம் எங்கிருந்து வந்தது என்பது சம்பந்தமான தகவல்களை நீங்கள் தெளிவாக வைத்திருப்பது அவசியம்.

Rapid Read
News18
News18

அதிக மதிப்பிலான பணப் பரிமாற்றங்கள் குறித்து வங்கிகள் வருமானத்துறையிடம் தகவல் தெரிவிப்பது அவசியமாகும். ஒரு நிதியாண்டில் உங்களுடைய சேமிப்புக் கணக்குகளில் 10 லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் அதிகமான அல்லது கரன்ட் அக்கவுன்ட்டுகளில் 50 லட்ச ரூபாய் அல்லது அதற்கும் அதிகமான பணம் டெபாசிட் செய்யப்படும் பட்சத்தில் அது குறித்து வருமான வரித்துறையிடம் தகவல் தெரிவிக்கப்படும். வழக்கத்திற்கு மாறான சிறிய அளவிலான டெபாசிட்கூட இங்கு கவனத்தில் கொள்ளப்படும். ஆனால், உடனடியாக இதற்காக உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்பது அர்த்தம் கிடையாது.

வங்கிகள் இந்த பணப் பரிமாற்றங்களை எவ்வாறு அறிக்கையிடுகின்றன?

இது மாதிரியான அனைத்து தகவல்களையும் வங்கிகள் வருமான வரி அதிகாரிகளிடம் SFT அல்லது ஸ்டேட்மென்ட் ஆஃப் ஃபைனான்ஷியல் டிரான்ஸாக்ஷன் வடிவில் சமர்ப்பிக்கும். இது ஆட்டோமேட்டிக்காகவே வருமான வரித்துறைக்கு அனுப்பப்பட்டு வரும். உங்களுடைய டெபாசிட் குறிப்பிட்ட வரம்பைவிட அதிகமாகும்போது, அந்த தகவல் வருமான வரி போர்ட்டலில் உள்ள ஆண்டுவாரியான தகவல் அறிக்கையில் நேரடியாக காண்பிக்கப்படும். ஒருவேளை நீங்கள் வருமான வரித்துறையில் காண்பித்த வருமானமும், வங்கி செயல்பாட்டில் உள்ள உங்களுடைய பணப் பரிமாற்றங்களும் ஒத்துப்போகாத பட்சத்தில் உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.

பணத்திற்கான மூலங்களை ஆவணப்படுத்துவது ஏன் முக்கியமானதாக கருதப்படுகிறது?

எந்தவிதமான கேள்விகளும் உங்கள் மீது எழாமல் இருப்பதற்கு பணம் எங்கிருந்து வந்தது என்பது சம்பந்தமான தகவல்களை நீங்கள் தெளிவாக வைத்திருப்பது அவசியம். அது வீட்டில் வைக்கப்பட்ட சேமிப்புப் பணம், பழைய நகையை விற்பனை செய்ததன் மூலமாக வந்த பணம், விவசாயம் மூலமாக வந்த வருமானம், பணமாக பெறப்பட்ட வாடகை அல்லது ஒரு சொத்தை விற்பனை செய்ததன் மூலமாக உங்களுக்கு கிடைத்த பணம் போன்ற எல்லாவற்றிற்குமான சரியான நிரூபணங்களை நீங்கள் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும். ஒருவேளை அதனை நீங்கள் செய்ய தவறும்பட்சத்தில் அது விவரிக்கப்படாத பணமாக வருமான வரித்துறையினரால் கருதப்படும். அதற்கு நீங்கள் அபராதங்களை செலுத்த வேண்டும்.

டேக்ஸ் ரிட்டன்களில் தொடர்ச்சி தன்மையின் முக்கியத்துவம் என்ன?

ஒவ்வொரு வருடமும் சீரான கேஷ் டெபாசிட்களை நீங்கள் பராமரித்து வருகிறீர்கள் என்றால், அது வழக்கமாக பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. உதாரணமாக மாத சம்பளம் வாங்கும் ஒருவர் ஒவ்வொரு மாதமும் நிலையான சம்பளத்தைப் பெற்று வரும்போது திடீரென்று அவருடைய கணக்கில் 5 லட்ச ரூபாய் அல்லது 8 லட்ச ரூபாய் பணம் டெபாசிட் ஆகும் பட்சத்தில் அதற்கான விளக்கத்தை வழங்குவது அவசியம்.

பாதுகாப்பாக இருப்பது எப்படி?: என்னவாக இருந்தாலும் உங்களுடைய பணம் அனைத்திற்குமான மூலங்கள் மற்றும் ஆதார ஆவணங்களைப் பராமரிப்பது மிகவும் முக்கியம். ஒருவேளை குடும்பத்திற்குள்ளாக விற்பனை செய்வது அல்லது மரபு வழியாக உங்களுக்கு கிடைப்பது போன்றவற்றிற்கு நீங்கள் வங்கியை தொடர்பு கொண்டு உங்களுக்கு பணம் கொடுக்கும் நபரிடம் இருந்து கையெழுத்திடப்பட்ட ஒரு குறிப்பு வாங்குவது அவசியம். இதன் மூலமாக எதிர்காலத்தில் எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

November 13, 2025 4:12 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

வருமான வரித்துறையில் இருந்து எந்தெந்த காரணங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்…? அவசியம் தெரிஞ்சுக்கோங்க…

Read More

Previous Post

கொல்கத்தா அணிக்கு துணை பயிற்சியாளராகும் முன்னாள் சிஎஸ்கே வீரர்.. விபரம் என்ன? | விளையாட்டு

Next Post

சபா மாநிலத் தேர்தல்; தவறான தகவல்களை தடுக்கும் நோக்கில் TikTok உடன் இணைகிறது தேர்தல் ஆணையம் | Makkal Osai

Next Post
சபா மாநிலத் தேர்தல்; தவறான தகவல்களை தடுக்கும் நோக்கில் TikTok உடன் இணைகிறது தேர்தல் ஆணையம் | Makkal Osai

சபா மாநிலத் தேர்தல்; தவறான தகவல்களை தடுக்கும் நோக்கில் TikTok உடன் இணைகிறது தேர்தல் ஆணையம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin