பிரதமர் மோடி 3ஆவது முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில், அதன் பின்னர் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக கொரோனா ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்ட சிறு, குறு நடுத்தர தொழில்கள் மெல்ல மீண்டு வருகின்றன. அதற்கு உதவியாக, சிறு, குறு, நடுத்தர தொழில்துறையில் வேலை வாய்ப்புகளை பெருக்கும் வகையிலும் பல்வேறு திட்டங்கள், சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, கோழிப்பண்ணை, பால் பண்ணை, தேனீ வளர்ப்பு உள்ளிட்ட சிறு, குறு தொழில்களுக்கு நிதியுதவி வழங்கும் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 20 லட்சம் ரூபாயாக உள்ள கடன் வரம்பை, இரட்டிப்பாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. கடன் உத்தரவாதத்தை இரண்டு கோடி ரூபாயில் இருந்து, ஐந்து கோடியாக உயர்த்துவது, உலகளவில் பொருட்களை விற்பனை செய்ய ஊக்கத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள் சிறு குறு தொழில்துறையினர்.
Also Read :
EPF பலன்கள் மற்றும் பணத்தை வித்ட்ரா செய்வதற்கான வழிமுறைகள்!!!
மேலும், உள்நாட்டு உற்பத்தியை பெருக்க, தொழில் வணிகம் செய்பவர்களுக்கு வாய்ப்புகளை அதிகரிப்பதோடு, மானியம் வழங்க வேண்டும் என்று கோருகிறார் இந்திய தொழில் முனைவோர் சங்க தேசிய தலைவர் ரகுநாதன். சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கும் செயல்திறன் அடிப்படையில் ஊக்கத் தொகை வழங்கும் பிஎல்ஐ திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
உள்கட்டமைப்பு மேம்பாடு, டிஜிட்டல் மயமாக்கல், திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றில் முதலீடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் பட்சத்தில், சிறு குறு தொழில்துறையை மேம்படுத்த உதவும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
