இந்த நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.வி.என். பட்டி கலந்து கொண்டு முக்கிய உரையாற்றினாா். இதில், மத்திய நிதிசாா் சேவைகள் துறையின் மூத்த அதிகாரிகள், பல்வேறு பொது மற்றும் தனியாா் துறை வங்கிகளின் அதிகாரிகள், இந்திய வங்கிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோரும் பங்கேற்றனா்.

