Last Updated:
மகளிர் உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.
மகளிர் உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்திய வீராங்கனை திவ்யா இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை நிகழ்த்தியுள்ளார்.
ஜார்ஜியாவில் ஃபிடே மகளிர் உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனையும் சர்வதேச கிராண்ட் மாஸ்டருமான 19 வயதான திவ்யா தேஷ்முக் முன்னாள் உலக சாம்பியனும் சீன வீராங்கனையுமான டேனை எதிர்கொண்டார்.
முதல் போட்டி டிராவில் முடிவடைய இரண்டாவது போட்டியின் 101வது நகர்த்தலில் வெற்றி வாகை சூடி இறுதிக்குள் காலடி பதித்துள்ளார். இதன் மூலம் உலகக் கோப்பை செஸ் தொடரில், இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
மற்றொரு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் நம்பர் ஒன் வீராங்கனை ஹம்பி – சீன வீராங்கனை லியை எதிர்கொண்டார். இதன் இரண்டு ஆட்டங்களும் டிராவில் முடிவடைந்துள்ளதால் வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் போட்டி இன்று நடத்தப்படுகிறது.
July 25, 2025 7:25 AM IST


