கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
வயநாட்டில் 64.53 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் வெளியிட்டப்பட்டுள்ள முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று 9.45 லட்சம் வாக்காளா்கள் வாக்குப்பதிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அக்கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி போட்டியிட்டுள்ளார்.
தோ்தலில் முதன்முறையாக களமிறங்கியிருக்கும் பிரியங்கா காந்தி வயநாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவொன்றில், “தங்களுடைய அன்பை எனக்களித்த, என்னை பரந்து விரிந்த கைகளால் வரவேற்ற வயநாட்டு மக்களுக்கு உங்களுடைய ஜனநாயக உரிமையை வெளிப்படுத்தியதற்காக மிகப்பெரியதொரு நன்றி!
நமது தேசம் கட்டமைக்கப்பட்டுள்ள கொள்கைகளுக்காக நான் தொடர்ந்து போராடுவதற்கும், நான் மேலும் கடினமாக உழைப்பதற்கும் நீங்கள் உத்வேகமாக இருக்கிறீர்கள்.
வயநாட்டிலுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒவ்வொரு தொண்டருக்கும், தலைவருக்கும், இந்த பிரசாரத்துக்காக எனக்கு உங்களின் ஆதரவைத் தர, கேரளம் முழுவதுமிலிருந்தும் நாடு முழுவதுமிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்து வருகை தந்திருந்த பெரும்பாலான உங்களுக்கும், நம் கொள்கைகளுக்காக நீங்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளுக்கும், உங்களின் அன்புக்கும், ஒப்பில்லா ஈடுபாட்டுக்கும் நான் மிகுந்த நன்றிக்கடன் பட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
നിറഞ്ഞ മനസ്സോടെ എന്നെ സ്വീകരിക്കുകയും സ്നേഹിക്കുകയും ചെയ്ത വയനാട്ടിലെ ഓരോരുത്തരോടും ഞാൻ കടപ്പെട്ടിരിക്കുന്നു. പോളിങ് ബൂത്തിലെത്തി വിലയേറിയ സമ്മതിദാനാവകാശം വിനിയോഗിക്കുക വഴി ജനാധിപത്യത്തിന് കരുത്തുപകർന്ന ഓരോരുത്തരോടും നന്ദി പറയുന്നു. നമ്മുടെ രാജ്യത്തിന്റെ മൂല്യങ്ങളിൽ…
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) November 13, 2024

&w=1200&resize=1200,675&ssl=1)