Last Updated:
Nagpur Riots | மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், நாக்பூர் கலவரத்தில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களை புல்டோசர் மூலம் இடிக்க எச்சரித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், அவுரங்கசீப் கல்லறை தொடர்பாக இந்துத்துவ அமைப்புகள் கடந்த திங்கட்கிழமை போராட்டம் நடத்தினர். அப்போது, மத நூல் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவிய நிலையில், இரு சமூகங்களுக்கு இடையே கலவரம் வெடித்தது. இதில் பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பொது சொத்துக்கள் சூறையாடப்பட்டன.
கலவரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், கலவரத்தில் 33 போலீசார் காயம் அடைந்த நிலையில், காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வன்முறையில் ஈடுபட்டவர்களிடம் இருந்து சேதமடைந்த பொது சொத்துக்களுக்கான செலவை வசூலிக்க இருப்பதாகவும், செலவை ஏற்காவிட்டால், அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்து ஏலம் விடப்படும் எனவும், தேவைப்படும் இடங்களில் புல்டோசர் பயன்படுத்தப்படும் என்றும் எச்சரித்தார்.
இதை படிங்க : கர்நாடகாவில் வெடித்த போராட்டம் : கன்னட அமைப்பினர் சாலை மறியல்… தொடரும் பதற்றம்!
உத்தரப்பிரதேசத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்கும் கலாச்சாரத்திற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், மகாராஷ்டிரா முதல்வரும் புல்டோசர் பயன்படுத்துவோம் எனக் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Mumbai,Maharashtra
March 23, 2025 7:47 AM IST
“வன்முறையில் ஈடுபட்டவர்களின் வீடுகள் புல்டோசரால் இடிக்கப்படும்…” – சர்ச்சையான மகாராஷ்டிர முதலமைச்சர் எச்சரிக்கை

