வருமான வரிதொடர்பான பணிகளை முடிப்பதற்கு, ஞாயிற்றுக்கிழமையான இன்று நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகள் செயல்படுகின்றன.
இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகள் மற்றும் அதன் கிளைகள் இன்று திறந்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன் படி, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் பாங்க், பாங்க் ஆஃப் பரோடா, பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் மகாராஷ்ட்ரா, கனரா வங்கிகள் செயல்படும். சென்ட்ரல் பாங்க், சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, யூகோ வங்கி என 12 பொதுத்துறை வங்கிகளும் இன்று திறந்திருக்கும்.
மேலும், அரசு பணிகள் தொடர்பான சேவைகளை மேற்கொள்ளும் தனியார் வங்கிகளான ஆக்சிஸ், சிட்டி யூனியன், ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ உள்ளிட்டவையும் இன்று செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :
தள்ளிப்போன 2 தேர்வுகள்… பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறையில் அதிரடி மாற்றம்
நடப்பு நிதியாண்டின் கடைசி நாள் ஞாயிற்றுக்கிழமையில் வந்ததால், வருமான வரி தொடர்பான பணிகளை முடிப்பதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
வங்கிகள் இன்று செயல்படுவது தொடர்பாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…