Last Updated:
வங்கதேச கிரிக்கெட் அணி நவீன கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்றால், அதற்கான முடிவுகளை எடுப்பவர்களும் நவீன சிந்தனையுடன் இருக்க வேண்டும்.
வங்கதேச கிரிக்கெட் வாரிய தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் வீரர் தமிம் இக்பால் விருப்பம் தெரிவித்துள்ளார். அவர் அணியின் இயக்குனர் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
வங்கதேச கிரிக்கெட் வீரர் தமீம் இக்பால், அந்நாட்டு கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான மற்றும் வெற்றிகரமான வீரர்களில் ஒருவர். அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் வடிவங்களிலும் (டெஸ்ட், ஒருநாள், டி20) வங்கதேச அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் தமீம் இக்பால் தான்.
மேலும் 3 ஃபார்மேட் சர்வதேச கிரிக்கெட்டிலும் (டெஸ்ட், ஒருநாள், டி20) சதம் அடித்த ஒரே வங்கதேச வீரர் என்ற பெருமை இவருக்கு உண்டு. வங்கதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்று, பல வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார்.
சமீபத்தில் ஓய்வை அறிவித்த தமிம் இக்பால் அடுத்ததாக வங்கதேச கிரிக்கெட் வாரிய தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது-
கிரிக்கெட்டில் அரசியல் இருக்கக்கூடாது என்று அனைவரும் சொன்னாலும், தற்போது நிறைய மோதல்களும், வீண் வதந்திகளும் பரவி வருகின்றன. இதைக் கடந்து, கிரிக்கெட்டிற்குச் சிறந்த வேட்பாளர் யார் என்பது குறித்து விவாதிக்க வேண்டும்.
தேர்தலில் ஒருவேளை இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அதன் பிறகு தலைவர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து முடிவெடுப்பேன்.
August 31, 2025 10:12 AM IST


