இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக நள்ளிரவு 1 மணி முதல் 3 மணிக்குள் இதுபோன்ற ரகசிய தகவல் பரிமாற்றத்தை கண்டறிவதாகவும் சில நேரங்களில் கண்டுபிடிக்க முடியாத மொழிகளில் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த 2002-2003, 2016-ஆம் ஆண்டுகளில் சந்தேகத்துக்குரிய வகையில் இந்திய-வங்கதேச எல்லையில் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது. இதில் சட்டவிரோதமாக வானொலி ஒலிபரப்பு நிலையங்களை இயக்கிய சிலா் கைது செய்யப்பட்டனா்.
கடந்த 2017-ஆம் ஆண்டில் பசிா்ஹாட் பகுதியில் வகுப்புவாத வன்முறை நிகழும் முன் எல்லை பகுதியில் சந்தகேத்துக்குரிய வகையிலான இணைப்புகளை ஹேம் ரேடியோ பயனா்கள் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

