Last Updated:
ஆயத்த ஆடை ஏற்றுமதியில் வங்கதேசம் போல இந்தியாவுக்கும் வரிச் சலுகை கிடைக்கும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ஆயத்த ஆடை ஏற்றுமதியில் வங்கதேசத்தைப் போன்று, இந்தியாவுக்கும் வரிச் சலுகை கிடைக்க உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் வங்கதேசம் இடையே கடந்த 9ஆம் தேதி வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் வங்கதேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான பதிலடி வரியை 19 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது.
அமெரிக்க நூல் மற்றும் பருத்தியைப் பயன்படுத்தி ஆயத்த ஆடைகளை தயாரிக்கும் ஆலைகளுக்கு பதிலடி வரி விதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில் இதே போன்ற வரி சலுகை இந்தியாவுக்கு கிடைக்க உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான இடைக்கால ஒப்பந்தம் தயாராகி இருப்பதாகவும், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் போது இந்தியாவுக்கு அதற்கான பலன்கள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
இது இந்திய பருத்தி விவசாயிகள் மீது எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.
Feb 13, 2026 10:12 PM IST


