• Login
Monday, June 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

வங்கதேசத்துக்கு வேறு வழி இல்லை; இந்தியாவுடன் இணக்கமாக இருப்பதே நல்லது: இடைக்கால தலைமை ஆலோசகர் கருத்து | Bangladesh has no option but to have good ties with India: Muhammad Yunus

GenevaTimes by GenevaTimes
March 4, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
வங்கதேசத்துக்கு வேறு வழி இல்லை; இந்தியாவுடன் இணக்கமாக இருப்பதே நல்லது: இடைக்கால தலைமை ஆலோசகர் கருத்து | Bangladesh has no option but to have good ties with India: Muhammad Yunus
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவுடன் நல்லுறவு வைப்பதைத் தவிர வங்கதேசத்துக்கு வேறு வழியில்லை வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

வங்கதேச நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்த பிறகு அந்த நாடு பெரும் பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது. தற்போது அங்கு இடைக்கால அரசு நடைபெற்று வருகிறது. வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறார். பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கலைய அங்கு இடஒதுக்கீட்டுக்கு எதிராக நடந்த மிகப்பெரிய போராட்டம்தான் காரணம். போராட்டம் வெடித்த பிறகே பிரதமர் பதவியை, ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார். ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் இந்தியாவில் தஞ்சமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தியாவுடன் நல்லுறவு வைப்பதைத் தவிர வங்கதேசத்துக்கு வேறு வழியில்லை வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பிபிசி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: தாய்லாந்தில் வரும் ஏப்ரல் 3, 4-ம் தேதிகளில் பிம்ஸ்டெக் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசவுள்ளேன். அப்போது இரு நாடுகளுக்கு இடையே உள்ள நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும்.

இந்தியா, வங்கதேச நாடுகளுக்கு இடையேயான உறவு மிகவும் சிறந்த முறையில் உள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு எப்போதும் மிகச்சிறந்த வகையில் அமைந்திருக்கிறது. இது எதிர்காலத்திலும் தொடரும். இந்தியாவுடன் நல்லுறவு வைப்பதைத் தவிர வங்கதேசத்துக்கு வேறு வழியில்லை

எங்கள் நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மிகவும் நெருக்கமானவை. இரு நாடுகளும் ஒருவரையொருவர் மிகவும் சார்ந்து இருக்கிறோம். வரலாற்று ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நாங்கள் மிகவும் நெருக்கமாக இருப்பதால், எங்களை தனிமைப்படுத்த முடியாது. இருப்பினும், 2 நாடுகளிடையே சில மோதல்கள் எழுந்துள்ளன. தவறான பிரச்சாரம் காரணமாக இந்த மோதல் எழுந்துள்ளது. இதன் விளைவாக, எங்களுக்கு இடையே ஒரு தவறான புரிதல் எழுந்துள்ளது. அந்த தவறான புரிதலை நாங்கள் சமாளிக்கவும், அதிலிருந்து மீண்டு வரவும் முயற்சித்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிய கட்சி தொடக்கம்: இதற்கிடையே, வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற மிகப்பெரிய அளவிலான மாணவர் போராட்டத்தின்போது நடந்த பிரச்சாரங்களில் பங்கேற்றவர்கள் சேர்ந்து தேசிய குடிமக்கள் கட்சி என்னும் புதிய கட்சியை சமீபத்தில் தொடங்கியுள்ளனர். போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் அமைப்பின் தலைவரான நஹித் இஸ்லாம் தலைமையில் இக்கட்சி உருவாகியுள்ளது. இந்த புதிய கட்சிக்கு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்று வங்கதேச இடைக்கால அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதைத் தொடர்ந்து, வரும் டிசம்பரில் வங்கதேச நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இடைக்கால அரசு செய்து வருகிறது. இதற்கிடையே, தற்போது மாணவர்கள் சார்பில் தொடங்கியுள்ள புதிய கட்சிக்கு, இடைக்கால அரசின் ஆலோசகர் முகமது யூனுஸ் ஆதரவு அளித்துள்ளதால், தேர்தல் நியாயமாக நடைபெறுமா என்று எதிர்க்கட்சியான வங்கதேச தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.



Read More

Previous Post

“துபாய் எங்கள் சொந்த மைதானம் இல்லை” – விமர்சனங்களுக்கு ரோஹித் பதிலடி | Dubai is not our home ground Rohit responds to criticism

Next Post

மலேசியாவில் அதிகரித்து வரும் மின்னியல் கழிவு பிரச்சினை | Makkal Osai

Next Post
மலேசியாவில் அதிகரித்து வரும் மின்னியல் கழிவு பிரச்சினை | Makkal Osai

மலேசியாவில் அதிகரித்து வரும் மின்னியல் கழிவு பிரச்சினை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin