Last Updated:
வங்கக்கடலில் நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு மீன்களின் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு மீன்களின் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கடலில் மீன் வளத்தைப் பெருக்கும் விதமாக, அவற்றின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை வங்கக்கடலில், 61 நாட்கள் விசைப்படகு மூலம் மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல மத்திய அரசு தடை விதித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்தது. குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு, எண்ணூர், காட்டுப்பள்ளி, கோரைகுப்பம், குனங்குப்பம் உட்பட 32 மீனவ கிராமங்களில் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று, நாகப்பட்டினத்தில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், காரைக்காலில் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் கிழக்கு பகுதியில் கன்னியாகுமரி வரை சுமார் ஆயிரத்து 76 கிலோமீட்டர் நீளமுள்ள கடல் பகுதிகளில் மீன்பிடித் தடை அமலுக்கு வந்தது.
மீன்பிடி தடை காரணமாக அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஆழ்கடல் மீன்வரத்து இருக்காது என்பதால், மீன்கள் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.


