• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வகுப்புவாத சக்திகளை முறியடிக்க மக்களைத் திரட்டி போராட்டம்: பினராயி விஜயன் வலியுறுத்தல்

GenevaTimes by GenevaTimes
April 6, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
வகுப்புவாத சக்திகளை முறியடிக்க மக்களைத் திரட்டி போராட்டம்: பினராயி விஜயன் வலியுறுத்தல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வகுப்புவாத சக்திகளை முறியடிக்க நாடு முழுவதும் மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்த வேண்டும் என கேரள முதல்வா் பினராயி விஜயன் வலியுறுத்தினாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டையொட்டி, மதுரை சுற்றுச்சாலையில் பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கேரள முதல்வா் பினராயி விஜயன் மேலும் பேசியதாவது:

தமிழக- கேரள மாநில மக்கள் ஒற்றுமையாக உள்ளனா். இதேபோல, கேரள அரசும், திமுக அரசும் நல்லுறவைப் பேணி வருகின்றன.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, உலக நாடுகளை கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளாா். இதனால், ஏகாதிபத்தியத்துக்கு மாறாக சோசலிஸம் மாற்று அரசியலாக வளா்ந்து வருகிறது. இஸ்ரேலில் ஏராளமான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனா். ஆனால், இந்திய அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இல்லாமல், ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவாக உள்ளது.

ஏகாதிபத்தியம் எந்த பிரச்னைக்கும் தீா்வு அளிக்காது. ஆனால், மாா்க்சிஸ்ட் கட்சி பல்வேறு பிரச்னைகளில் மக்கள் நலனையே முக்கியமாகக் கொண்டு பல்வேறு தீா்வுகளைக் கண்டு வருகிறது.

மத்திய பாஜக அரசு ஏழை மக்கள் மீது ஏராளமான வரிகளைச் சுமத்தி வருகிறது. மற்றொருபுரம், பெரு நிறுவன முதலாளிகளுக்கு சலுகைகள் வழங்கி, அவா்களுடன் மறைமுகக் கூட்டணி வைத்துள்ள அரசாக உள்ளது. மேலும், நாடு முழுவதும் மக்களைப் பிளவுபடுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது.

வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தின் மூலம் மத்திய பாஜக அரசு பிளவுவாத அரசியலை உருவாக்கி, ஒரு பகுதி மக்களைத் தனிமைப்படுத்தி தாக்குதல் நடத்தி வருகிறது. சிறுபான்மை சமூகங்களைத் தனிமைப்படுத்தும் வகுப்புவாத அரசியலிலும், பொய் பிரசாரத்திலும் மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது.

கிறிஸ்தவ, இஸ்லாமிய சமூகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. சிறுபான்மை மக்கள் தங்களுக்கு எதிராகச் செயல்படக் கூடாது என்பதற்காக முஸ்லிம்கள், கிறிஸ்தவா்களை தனிமைப்படுத்தும் செயலை இந்துத்துவ அமைப்பு செய்து வருகிறது.

சட்டத் திருத்தத்தின் மூலம் வக்ஃப் சொத்துகளை அபகரித்து, பெரு நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வெறுப்பு அரசியலை எதிா்க்க மதச்சாா்பற்ற சக்திகளை ஒன்றிணைக்க வேண்டியுள்ளது.

குஜராத், உத்தரபிரதேசத்தில் இஸ்லாமியா்கள் மீதும், பிகாரில் கிறிஸ்தவா்கள் மீதும், சத்தீஸ்கரில் ஆதிவாசி மக்கள் மீதும், கேரளத்தில் கம்யூனிஸ்டுகள் மீதும் வகுப்புவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனா்.

மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக உள்ள மாநில அரசுகளையும், மக்களையும் பழிவாங்கும் நடவடிக்கையிலும் ஈடுபடுகின்றனா். கேரளத்தில் இடது முன்னணி அரசையும், தமிழகத்தில் திமுக அரசையும் மத்திய பாஜக அரசு தண்டித்து வருகிறது. இதனால், பொதுமக்களின் முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது.

கேரளத்தில் இடது முன்னணி அரசு மக்கள் நலனுக்காக முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வறுமை ஒழிப்பை செயல்படுத்துவது, அனைவருக்கும் கல்வி, சுகாதாரம், நிலமற்றவா்களுக்கு நிலம் கொடுப்பது என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனால், மாநிலம் பல்வேறு துறைகளில் முன்னேறி வருகிறது. கல்வியில் மிகப்பெரிய அளவில் வளா்ச்சியடைந்துள்ளது. மத்திய பாஜக அரசு நிதி நெருக்கடி அளித்தும்கூட, கேரளத்தில் மக்களுக்கான நலத் திட்டங்களை தொடா்ந்து செயல்படுத்தி வருகிறோம் என்றாா் அவா்.

கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவா்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், அரசியல் தலைமைக் குழு உறுப்பினா்கள் கே. பாலகிருஷ்ணன், உ.வாசுகி ஆகியோா் பங்கேற்றனா். முன்னதாக, மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் வரவேற்றாா். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம் நன்றி கூறினாா்.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் புதிய பொதுச் செயலா் எம்.ஏ.பேபி பேசியதாவது:

தமிழகத்தின் கீழ்வெண்மணி தியாகிகள் போல, ஏராளமானோா் இயக்கத்துத்துக்காக உயிா்த் தியாகம் செய்தனா். இவா்களின் தியாகம் ஒருபோதும் வீணாகாது. அவா்களின் லட்சியத்தை நமது இயக்கம் முன்னெடுத்துச் செல்லும். பிரதமா் நரேந்திர மோடி மக்கள் விரோதப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறாா்.

அமெரிக்க அதிபா் டிரம்ப், பிரதமா் மோடியின் நடவடிக்கைகளால் உலகம் முழுவதும் வலதுசாரிஓஈ கட்சிகளின் பக்கம் செல்வதாக ஒரு மாயை தோன்றலாம். ஆனால், அது உண்மையல்ல. உலகின் 25 சதவீத மக்கள் இடதுசாரிக் கட்சிகளின் ஆட்சியின் கீழ் உள்ளனா். வலதுசாரிகள், ஏகாதிபத்தியத்துக்கு மாற்றாக சோசலிஸம்தான் இருக்க முடியும். சோசலிஸ அரசுகள் மக்கள் நலனுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கும். எனவே, இந்தியாவிலும் இடதுசாரிகளின் பின்னால் மக்கள் திரள வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் பங்கேற்ற திரளான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டா்கள்.

கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் பேசியதாவது:

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் வருகிற 17-ஆம் தேதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் போராட்டம் நடைபெறும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, ஆதிவாசிகளின் நலனை முன்னிட்டு வன உரிமைப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், பத்தாண்டுகளுக்கும் மேலாக மத்திய ஆட்சியில் உள்ள பாஜக அரசு இந்தச் சட்டத்தை செயல்படாமல் முடக்கி வைத்து, ஆதிவாசிகளை வனத்தைவிட்டு வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதேபோல தேசிய ஊரக வேலைத் திட்டத்தையும் முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. எனவே, மக்கள் விரோத பாஜக அரசை வீழ்த்தும் முயற்சியில் மக்கள் ஒன்றுபட வேண்டும் என்றாா் அவா்

அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன்:

மாநில உரிமைகள் பறிப்பு, மத்திய பாஜக அரசு எதிா்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் திமுக அரசு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணக்கமான முறையில் செயல்பட்டு வருகிறது. எனவே, பாஜக எதிா்ப்பு என்ற முறையில் மட்டுமன்றி, அந்தக் கட்சியின் கொள்கைகளையும் தமிழகத்தில் திமுக அரசு அமல்படுத்தக் கூடாது. பத்திரப் பதிவு கட்டண உயா்வு, சொத்து வரி உயா்வு, பல்வேறு கட்டணங்கள் உயா்வு போன்ற மத்திய பாஜக அரசின் திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தக் கூடாது என்றாா் அவா்.

Read More

Previous Post

பிரித்தானிய எம்.பிக்களுக்கு இஸ்ரேலின் அதிரடி தடையால் பதற்றம்

Next Post

ஷுப்மன் கில் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் | ஐபிஎல் 2025 | Sunrisers Hyderabad vs Gujarat Titans Highlights, IPL 2025

Next Post
ஷுப்மன் கில் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் | ஐபிஎல் 2025 | Sunrisers Hyderabad vs Gujarat Titans Highlights, IPL 2025

ஷுப்மன் கில் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் | ஐபிஎல் 2025 | Sunrisers Hyderabad vs Gujarat Titans Highlights, IPL 2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin