Last Updated:
வகுப்பறைக்குள்ளேயே முதலாமாண்டு மாணவனை, பேராசிரியர் ஒருவர் பல்வேறு சடங்குகளுடன் திருமணம் செய்த வீடியோ வெளியானது. இருவரும் மாறி மாறி நெற்றியில் திலகமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேற்கு வங்கத்தில் பேராசிரியை ஒருவர், வகுப்பறையில் மாணவனை திருமணம் செய்த வீடியோ வெளியான நிலையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் பேராசிரியையும், மாணவனும் புதுமண தம்பதி போல், ஒருவருக்கொருவர் பொட்டு வைத்துக்கொண்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேற்கு வங்கத்தின் ஹரிங்கடா பகுதியில் அமைந்துள்ள மௌலானா அபுல் கலாம் ஆசாத் பல்கலைக்கழகத்தில், வகுப்பறைக்குள்ளேயே முதலாமாண்டு மாணவனை, பேராசிரியர் ஒருவர் பல்வேறு சடங்குகளுடன் திருமணம் செய்த வீடியோ வெளியானது. இருவரும் மாறி மாறி நெற்றியில் திலகமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் விசாரணைக் குழுவை அமைத்தது. உளவியல் துறை சார்ந்த மாணவர்களுக்கு ஆவணப்படம் காட்டுவதற்காக இவ்வாறு எடுக்கப்பட்டதாக அந்தப் பேராசிரியை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Also Read | ஆபாச வெப்சைட்டில் பணம் சம்பாதிக்க பக்கா ப்ளான்.. யூடியூபர் திவ்யாவின் இன்னொரு முகம்!
எனினும் இதுகுறித்து விசாரணை நிறைவடையும் வரை சம்பந்தப்பட்ட பேராசிரியை விடுப்பில் இருக்க பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
January 30, 2025 8:16 AM IST


