கோலாலம்பூர், :
கிளந்தான்–பேராக் எல்லை வனப்பகுதியில் மலையேற்றப் பயிற்சியின் போது மாயமான, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட ஆறு பேரும் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மலையேற்றக் குழுவில் இடம்பெற்றிருந்த ஒரு மலை வழிகாட்டியுடன் (Mountain Guide) காவல்துறையினர் வெற்றிகரமாகத் தொடர்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பது தெரியவந்தது.
தற்போது அவர்களை வனப்பகுதியிலிருந்து பாதுகாப்பாக அழைத்து வர ஹெலிகாப்டர் மூலம் மீட்பு நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி கிளந்தான், லோஜிங்கில் உள்ள ‘போஸ் டாகோ’ (Pos Dakoh) நுழைவாயில் வழியாக இக்குழுவினர் காட்டுக்குள் சென்றனர். திட்டமிட்டபடி செப்டம்பர் 3-ஆம் தேதி பேராக் மாநிலத்தில் அமைந்துள்ள ‘போஸ் கெமார்’ (Pos Kemar) வழியாக அவர்கள் வெளியேறியிருக்க வேண்டும். இருப்பினும், குறிப்பிட்ட நாளில் அவர்கள் திரும்பாததாலும், அவர்களைத் தொடர்புகொள்ள முடியாமல் போ போனதாலும், அச்சமடைந்த உறவினர்கள் நேற்று சிலாங்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இப்புகாரைத் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் (SAR) தேடுதல் பணியைத் தீவிரப்படுத்திய நிலையில், தற்போது அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளனர்.



