மலேசியாவில் உள்ள sepang இல் பயங்கர சாலை விபத்து நடந்துள்ளது.இச்சம்பவம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஜூலை 17-ஆம் தேதி காலை சுமார் 9.10 மணியளவில் sepang இல் லாரி, இரண்டு பைக்குகள் என மொத்தம் ஏழு வாகனங்கள் மோதி கோர விபத்து நிகழ்ந்தது.
லாரி ஓட்டுநருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் லாரி கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த கோர விபத்து நேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
லாரி ஜலான் புக்கிட் டுகாங்கில் சென்ற போது ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிர் பாதையில் சென்றது. மேலும் 6 வாகனங்கள் மோதியது என்று Sepang OCPD Ass Comm Wan Kamarul Azran Wan Yusof கூறினார்.

