தெம்பனீஸ் விரைவுச்சாலையில் லாரி உட்பட நான்கு வாகனங்கள் மோதிய சம்பவத்தில் 6 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
லாரி இருக்கையில் ஓட்டுநர் சிக்கி கொண்டதாகவும், அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இடிபாட்டில் சிக்கி வெளிநாட்டு ஊழியர் மரணம்… கட்டுமான நிறுவனத்துக்கு S$210,000 அபராதம்
நேற்று ஆகஸ்ட் 26 அன்று மாலை 5 மணியளவில் SLE நோக்கிச் செல்லும் வழியில் TPE-யில் நடந்த இந்த விபத்தில் லாரி, வேன் மற்றும் இரண்டு கார்கள் மோதியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
லாரியில் சிக்கிய ஆடவர் ஹைட்ராலிக் மீட்பு கருவிகளைப் பயன்படுத்தி மீட்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 30 வயதுமிக்க ஒரு லாரி ஓட்டுநர் மற்றும் அதில் பயணித்த 22 முதல் 46 வயதுக்குட்பட்ட ஐந்து ஊழியர்கள் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ரங்கூன் சாலை உள்ளிட்ட இடங்களில் பிடிபட்ட 17 வாகன ஓட்டுநர்கள்
அதில் இருவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கும், நான்கு பேர் செங்காங் பொது மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டதாக SCDF தெரிவித்துள்ளது.
மேலும் மூன்று பேருக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டதாகவும், ஆனால் அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டதாகவும் SCDF கூறியது.
விசாரணைகள் தொடர்கின்றன.
“சம்பளம் முறையா வரல” – கட்டுமானத் துறை வெளிநாட்டு ஊழியர்களிடம் அதிகரித்த புகார்

