• Login
Wednesday, November 26, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

லாட்டரி வென்றதை ஆன்லைனில் பதிவிட்ட நபர்.. இறுதியில் காத்திருந்த மெகா ட்விஸ்ட் | உலகம்

GenevaTimes by GenevaTimes
November 22, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
லாட்டரி வென்றதை ஆன்லைனில் பதிவிட்ட நபர்.. இறுதியில் காத்திருந்த மெகா ட்விஸ்ட் | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 22, 2025 1:12 PM IST

லாட்டரியில் லட்சங்களை வென்றதால் அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். எல்லாம் நன்றாக சென்றுகொண்டிருந்தது, இந்நிலையில் மறுநாள், அவர் தூங்கி எழுந்து, தயாராகி, லாட்டரி பரிசைப் பெறுவதற்காக டிக்கெட் வாங்கிய கடைக்குச் சென்றார்.

மாதிரி படம்
மாதிரி படம்

பெரும்பாலான மக்களுக்கு காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை, அவர்கள் சாப்பிட்டது, குடித்தது போன்ற அவர்களின் அன்றாட விவரங்களை தங்கள் சமூக ஊடகக் கணக்குகள் மூலம் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

காலையில் என்ன சாப்பிட்டோம், என்ன உடைகள் அணிந்தோம், எங்கு சென்றோம், எங்கு செல்கிறோம், வெளியே என்ன சாப்பிட்டோம், வீட்டிற்கு செல்கிறோம், என் கார், என் பைக், எனது புதிய காலணிகள், எனது புதிய மொபைல் போன் போன்ற அனைத்து விவரங்களையும் பதிவிடுகிறோம். ஆனால் இதுபோன்ற நடத்தைகள் பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதை பற்றி பலர் கூறுவதை கேள்விப்பட்டிருக்கிறோம்.

சீனாவைச் சேர்ந்த ஒருவருக்கு இதே போன்ற பழக்கம் இருந்தது, இந்த பழக்கமானது அவருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. அவர் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் தனது நண்பர்களிடம் தனக்கு லாட்டரியில் வெற்றி கிடைத்ததாகச் சொன்னார். அவர் குரூப் சேட்டில் ஒரு லாட்டரி சீட்டின் புகைப்படத்தை வெளியிட்டு, லாட்டரியில் இவ்வளவு லட்சங்களை வென்றதாகக் கூறினார். இந்த செய்தியை கேட்டதும் குழுவில் இருந்த அனைவரும் அவரைப் பாராட்டினர்.

லாட்டரியில் லட்சங்களை வென்றதால் அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். எல்லாம் நன்றாக சென்றுகொண்டிருந்தது, இந்நிலையில் மறுநாள், அவர் தூங்கி எழுந்து, தயாராகி, லாட்டரி பரிசைப் பெறுவதற்காக டிக்கெட் வாங்கிய கடைக்குச் சென்றார். அங்கு அவருக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி கிடைத்தது. கடை உரிமையாளர் லாட்டரியில் வென்ற டிக்கெட் நம்பருக்கு ஏற்கனவே பணம் கொடுத்துவிட்டதாக கூறினார். அதைக் கேட்டதும் அவர் அதிர்ச்சியடைந்து, “இல்லை சார்.. என்கிட்ட இருக்குற டிக்கெட் தான் ஒரிஜினல்… வேணும்னா பாருங்க” என்று கூறினார். நான் அதைக் காட்டியதும், கடை உரிமையாளர், இதே மாதிரி டிக்கெட்டைக் காட்டிய ஒருவருக்கு ஆன்லைனில் ஃபண்ட் டிரான்ஸ்ஃபர் செய்திருப்பதாகக் கூறினார்.

இதனை கேட்டதும் அதிர்ச்சியடைந்த இவர், காவல் நிலையத்திற்குச் சென்று இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். விசாரணையின் போது ஆன்லைனில் பணப் பரிமாற்றம் செய்தது குறித்த அனைத்து தகவல்களையும் சேகரித்து, மோசடி செய்த நபரை அடையாளம் கண்டுபிடித்தனர். மோசடி செய்த நபர் வாட்ஸ்அப் குரூப் சேட்டில் உறுப்பினராக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்தனர். இறுதியில், அசல் லாட்டரி வென்றவருக்கு பணம் கிடைத்தது. ஆன்லைனில் அதிகமாக ஷேர் செய்வது உங்கள் தனியுரிமையையும், பணத்தையும் ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்பதற்கு இந்த விஷயம் ஒரு சான்றாகும்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

November 22, 2025 1:12 PM IST

Read More

Previous Post

தங்கத்தை வாடகைக்கு விடலாம்.. அசத்தலான புதிய முதலீட்டு விருப்பம்!

Next Post

அதிமுக முன்னாள் அமைச்சர் சுதர்சனம் கொலை: பவாரியா கும்பல் 3 பேர் குற்றவாளிகள் | Makkal Osai

Next Post
அதிமுக முன்னாள் அமைச்சர் சுதர்சனம் கொலை: பவாரியா கும்பல் 3 பேர் குற்றவாளிகள் | Makkal Osai

அதிமுக முன்னாள் அமைச்சர் சுதர்சனம் கொலை: பவாரியா கும்பல் 3 பேர் குற்றவாளிகள் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin