கிள்ளான் பள்ளத்தாக்கில் 11 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இரண்டு நெடுஞ்சாலைத் திட்டங்களை நிர்மாணித்ததற்காக, ஒரு நெடுஞ்சாலைச் சலுகையாளரின் தலைமை நிர்வாக அதிகாரியும், அந்த நிறுவனத்தின் மற்ற இரண்டு உயர் அதிகாரிகளும் எம்ஏசிசியால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆதாரம், இந்த மூவரும் இரண்டு திட்டங்களுக்காக லஞ்சம் கேட்டு பெற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது. “டத்தோ” பட்ட, கொண்ட தலைமை நிர்வாக அதிகாரியும் மேலும் இரண்டு சந்தேக நபர்களும் வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


