Last Updated:
அடுத்து விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியில், அபிஷேக் பூரல் – கே.எல்.ராகுல் ஆகியோரின் அபார ஆட்டத்தால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 13 பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெற்றது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கே.எல்.ராகுல், லக்னோ அணியின் உரிமையாளரிடம் பேசாமல் சென்றது கவனத்தை ஈர்த்துள்ளது.
நேற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 13 பந்துகளை மிச்சம் வைத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் லக்னோ அணி பேட்டிங் செய்தது. முகேஷ் குமாரின் வேகத்தை சமாளிக்க முடியாமல் லக்னோ அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.
அடுத்து விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியில், அபிஷேக் பூரல் – கே.எல்.ராகுல் ஆகியோரின் அபார ஆட்டத்தால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 13 பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என விளாசி 57 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
போட்டி முடிந்த பிறகு, வீரர்கள் அனைவரும் கைகுலுக்கிச் செல்வது வழக்கம். அப்படிச் செல்லும்போது, கே.எல்.ராகுல் தனது முன்னாள் அணியின் உரிமையாளர் (இதற்கு முன் கே.எல்.ராகுல் லக்னோ அணியில் விளையாடிக்கொண்டிருந்தார்) கை கொடுக்க வரும்போது, கே.எல்.ராகுலும் கை மட்டும் கொடுத்துவிட்டுச் சென்றார். மேலும் லக்னோ அணியின் உரிமையாளர் கே.எல்.ராகுலிடம் எதோ பேச வருவது போல உள்ளது. ஆனால் கே.எல்.ராகுல் அதைத் தவிர்த்துவிட்டு அந்த இடத்தை விட்டுச் சென்றார்.
கே.எல்.ராகுல் லக்னோ அணியின் கேப்டனாக இருந்தபோது, சஞ்சீவ் கோயங்கா கே.எல்.ராகுலைப் பொதுவெளியில் திட்டியது அனைவராலும் விமர்சிக்கப்பட்டது. இதையடுத்து கே.எல்.ராகுல் லக்னோ அணியை விட்டு வெளியேறினார். இதையடுத்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் சேர்ந்த அவர், லக்னோவிற்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினார்.
இந்த நிலையில் தான் நேற்று அரைசதம் அடித்த அவர், ஐபிஎல் தொடரில் வேகமாக 5000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். டெல்லி கேப்பிடல்ஸ் அணி வரும் 27ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.
April 23, 2025 11:49 AM IST


