• Login
Saturday, August 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ரொம்பின் சாலையில் கிடந்த மரக்கட்டையில் மோதி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த கார் – தாயும் மகனும் பலி! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 22, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
ரொம்பின் சாலையில் கிடந்த மரக்கட்டையில் மோதி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த கார் – தாயும் மகனும் பலி! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

குவாந்தான்-செரம்பான் சாலையின் 149.9-வது கிலோமீட்டரில் நேற்று இரவு 9.30 மணியளவில், சாலையில் கிடந்த மரக்கட்டையின் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த MPV கார் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தாயும், அவரது 6 வயது மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் காரில் பயணித்த கார்ட்டினி ஙாத்தேனான் (Kartinie Ngatenan – 46) மற்றும் அவரது 6 வயது மகன் முஹமட் அக்பர் முகமட் அஸ்மி (Muhamad Akf Mohd Azmi) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த குடும்பத்தினர் செரம்பானில் இருந்து பெல்டா கெராத்தோங் (Felda Keratong) நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது. கணவர் காரை ஓட்டிச் சென்றபோது, திடீரென சாலையின் குறுக்கே கிடந்த மரக்கட்டை மீது கார் மோதியுள்ளது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் வலதுபுறமாகப் பாய்ந்து அருகில் இருந்த பள்ளத்தாக்கிற்குள் தலைகீழாகக் கவிழ்ந்தது. இடிபாடுகளில் சிக்கித் தலையில் பலத்த காயமடைந்த தாயும் மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரை ஓட்டிச் சென்ற கணவர் தலையில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக முவாட்சாம் ஷா மருத்துவமனைக்குக் (Hospital Muadzam Shah) கொண்டு செல்லப்பட்டன. படுகாயமடைந்த கணவர் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-இன் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



Read More

Previous Post

ட்ரம்பின் பொருளாதார போர்: ஈரானின் கடும் எதிர்ப்பு|‘Economic D-Day’: Iran Hits Back at Trump’s Sanctions Threat

Next Post

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை வீதி விபத்துகளால் 1,749 பேர் உயிரிழப்பு – Sri Lanka Tamil News

Next Post
இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை வீதி விபத்துகளால் 1,749 பேர் உயிரிழப்பு – Sri Lanka Tamil News

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை வீதி விபத்துகளால் 1,749 பேர் உயிரிழப்பு - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin